அன்னையின் அன்பால் மட்டும்...!

அன்னை பிசைந்த சோற்றை
அள்ளித்த் தின்ற கைகள்....
அவசரமாய் வந்த "PIZZA" வை
கிள்ளிப் பார்த்துவிட்டு
கண்ணீரில் கைகழுவி
போகின்றன.....!!!



++++++++++++++++++++

பிஞ்சுக் குழந்தையினை
நெஞ்சில் வைத்து
கொஞ்சும் போது
நஞ்சுண்ட என் நாவும்
அமுதத்தை சுவைக்கின்றதே...!!!
அன்பில் மனம்
நிறைகின்றதே...!!!

அன்னையின் அன்பே
நிரந்தரமானது...
இதை அறியாதவன் மனது
இயந்திரமானது...!!!



++++++++++++++++++++

"அளவிட முடியாத
ஒன்றினால் அனைத்தும்
அர்த்தப்படுகின்றது
அன்னை உன் அன்பினால்
மட்டும்"



+++++++++++++++++++++

அன்னையின் அன்பும்
அன்புக் குழந்தையின்
சிரிப்பும் - என்
அரக்க குணங்கள்
அனைத்தையும்
அழித்துச்செல்கின்றன...!
அன்பால் மட்டுமே
அகிலம் இங்கு
செழித்தும் நிற்கின்றன...!!!



+++++++++++++++++++++++

"அன்பின் நண்பர்களே பிடித்திருந்தால் மறக்காம ஓட்டுப்போடுங்க"

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

  1. தங்களின் இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.com/2011/10/6102011.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.