என் யன்னல் நிலவே..!!!



என் யன்னல் நிலவே..
என்னவள் கனவில்
வருவாளென்று
நேற்றிரவு நேரத்துடன்
தூங்கிவிட்டேன்...
சூரியனிடம் சொல்லி
எனைச் சுட்டுவிடாதே...!

**************************************************


என் முற்றத்து மல்லிகையே...
அன்பானவளின்
அழகிய புன்னகைகண்டு
உனை நான் காணவில்லை
நாளை மலராமல் நின்று
எனை வாட்டிவிடாதே...!

**************************************************


என் இரவுக் காற்றே...
அவள் சுடிதார் பட்டு
சிதறிய கற்று என்
சுவாசக்காற்று ஆனதனால்
எனைத்தழுவும் இன்பக்காற்று நீ
எனை தவிக்கவிட்டுச் செல்லாதே...!

**************************************************


கூவுகின்ற குயிலே...
என் மயிலின் குரல்
வயலின் போன்றதுதான்
அதற்காய் உன்
தாலாட்டின்றிஎனை
தூங்கச்சொல்லாதே...!

**************************************************


பக்கத்துவீட்டு சுட்டியே...
அழகுப்பெண்மை அவளை நான்
பார்கபோகும் அவசரத்தில்
அழகுபொம்மை உனைநான்
பார்க்கத் தவறிவிட்டேன்
உன் பிஞ்சுமுத்தம் இல்லையென்று
எனை கொன்றுவிடாதே...!

**************************************************


என் குட்டிச்சுவரே...
பாவை போகும் இடம்தேடி
பாதம் நாட சென்றுவிட்டேன்
நாளைநான் அமரும்போது
இடிந்துவிடாதே...!

**************************************************


என் துடுப்புமட்டையே...
அவள் கண்வீசிய பந்துவீச்சில்
ஏற்கனவே நான் கிளீன்போல்ட்
கையில் உனை எடுக்கவில்லை
காரணம் கேட்காதே...
நாளைய போட்டியில் உன்
கோபத்தை காட்டாதே...!

**************************************************


என் கவிப்பேனாவே...
அவள் விழிகண்டு
பேசும் மொழிகண்டு
அவைதான் நல்ல கவியென்று
வியந்து நின்றேன் உனைவிட்டு
விலகிநின்றேன்.. தயவுசெய்து
கண்ணீரில் கவிதையெழுதி
எனை காயப்படுத்திவிடாதே...!

**************************************************



கடைசியாக...
என் அன்பு நண்பனே...
காதல் போதையில்
தடுமாறி விழுந்ததால்
நம் களியாட்ட போதையை
அருந்தாமல் விட்டுவிட்டேன்...
அதற்காக அடுத்த பார்டியில்
எனை அழைக்காமல்
விட்டுவிடாதே....!

**************************************************

நண்பர்களே இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் வழங்க மறந்திடாதிங்க...!

நட்புடன்,
நா.நிரோஷ்.


Comments

  1. வணக்கம்
    படத்துக்கு ஏற்ப கவிதைகளை நன்றாக செதுக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை அருமை ! படமும் கவிதையும் தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  3. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


    அறிமுகம்செய்தவர்-காவிகவி


    பார்வையிட முகவரி-வலைச்சரம்


    அறிமுகத்திகதி-23.07.2014

    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.