மாலை நேரத்து மயக்கம்...!

தண்ணீருக்குள்
கல்லாய் இருந்த
என் மனது
கண்ணீரால் கரைந்து
கிடக்கின்றது
அன்பே உன்
காதல் வேண்டி....!!!

ஆனால்,
உன்மனமோ
கல்லாய் இருக்கிறதே
காசு வேண்டி....!!!

என் மனதை
ஏன் கரைத்தாய்...?
காதல் விதை
ஏன் விதைத்தாய்...?

கண் முன்னே
நீயிருந்தும்
நீரிருந்தும்
எல்லாம் கானல் நீராய்
தோன்றுதடா....
காதல் காலநிலை
போன்றதடா...???




"நட்பின் ஓட்டுக்களை கொடுங்க... என் அன்பின் ஓட்டுக்களை எடுங்க"

அன்பின் நண்பன்,
நா.நிரோஷ்.

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.