காத்திருப்பு...!!!

காத்திருப்பு..!!!
--------------

வயது வந்தும்
வாய்ப்புகள் வரவில்லை....
வாய்ப்பு வந்தால்

வசதிகள் இல்லை.....
எழைஎனும் கூட்டிற்குள்
காத்திருப்பு தொடர்கிறது
கன்னிப் பறவைகளாய்....
"காசுக்காக கல்யாணம்"
எனும் சமூகம் உள்ளவரை....!!!




+++++++++++++++++++++++++++++++

பொழுது புலரா நேரம்
பூமரம் இல்லா வீதியில்
பூக்குடையுடன் நான்....
புன்னைகை அழகா
உன் புன்சிரிப்பை
பறிப்பதற்காய்.....
காத்திருந்த நாட்கள்
இன்றும் என் கண்முன்னே
காட்சியாய் வந்து செல்கின்றன....
சாட்சியான உண்மை காதலோடு
நான் காத்திருக்கும் வேளையிலே...
!!!




++++++++++++++++++++++++++++++++

அன்புடன்,
நா.நிரோஷ்.

"உங்கள் ஓட்டுக்கள் அவசியம்... என் Blog வீட்டில் இன்னும் கவிதைகள் பூப்பதட்க்கு"

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.