காதலெனும் கடும் சிறை...!!!


எனை
தூக்கிலிட்டாவது
என் கடைசி ஆசை
என்னவென்று
கேட்டுவிடேன்....
உனக்கும்
இரக்கமிருந்தால்...!!!



+++++++++++++++++++++++

உன்
நினைவு
என்றும்
என்னுடனே
இருக்கின்றது
என் நிழலாய்
வருவதனால்...!!!

என்
நிழலையும்
உன் நினைவு
மிஞ்சுகிறது
இரவிலும்
கனவாய் வருவதனால்...!!!



+++++++++++++++++++++++++++

நான்கு கண்களும்
நான்கு கைகளும்
இணைய முற்பட்டு
இரண்டு இதயத்தை
சிறைப்படுத்த
முயல்கின்றன....
காதலெனும்
கடும் சிறையில்...!!!



++++++++++++++++++++++++++

அன்பு நண்பர்களே அடியேன் ஆரம்பித்திருக்கிறேன் தங்களின் ஓட்டுக்கள் இட்டு எனை ஊக்கபடுத்துங்கள்...!

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.