விண்ணைத்தாண்டி வருவாயா...?


என் இதயம்
எப்போது
உன் பெயர் சொல்லி
இயங்க ஆரம்பித்ததோ....
அப்போதுதான்
அதற்க்கு கோளாறும்
ஆரம்பித்திருக்கிறது....!!!




++++++++++++++++++++++++

எல்லாக் கவிஞனின்
எழுத்தில் இருக்கும்
வெண்ணிலவே....!!!
என்னவளின்
விழி பேசும் மொழியின்
அர்த்தம் புரியவில்லை....!!!
விடிந்திருந்தும்
நீயும் இன்னும்
மறையவில்லை....!!!
என்னிலை
என்னவென்று பார்த்தாயா...
எனக்காய் கொஞ்சம்
விண்தாண்டி வருவாயா..?




++++++++++++++++++++++++

புன்னகைக்கு
பொருள்தரும்
உன் உதட்டில் இருந்து,
உன் மௌனத்திர்க்கான
பொருள் வரும்வரைக்கும்....
என் இதயம்
எரிந்துகொண்டுதான்
இருக்கும்....!!!




++++++++++++++++++++++++

காரிருட்டில்
கிடந்தாலும்
கலர்க்கனவுகள்
எனை முத்தமிட்டுச்
செல்கின்றன....
முழுமைபெற்ற
காதலினால்...!!!




++++++++++++++++++++++++


அன்பின் நண்பர்களே மறக்காம ஓட்டுப்போடுங்க...

அன்பின்,
நா.நிரோஷ்.


Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.