காதல் கடனும்.... கண்ணீர் வட்டியும்...!


நூறு வீதப்படி
காதல் கடன்
தந்தவள் நீ...!!!
எப்படியும் திரும்ப
கேட்டுவிடுவாய்
கவலைதான்....!!!

கேட்கும்போது,
ஐந்துவீத
கண்ணீர் வட்டி
கேட்பது ஞாயம்...
இப்படி நூறுவீத
கண்ணீர் வட்டி
கேட்பது அநியாயம்
இல்லையா...?
உனக்கு
அனுதாபம்
இல்லையா....?



+++++++++++++++++++

பரந்து விரிந்த
சாலையெங்கும்
என் பாதங்கள்
அலைந்து
திரிகின்றன....

பறந்து
பிரிந்துபோன
அன்புக்கு காதலியின்
பாதச் சுவடுகள் தேடி....!!!



மறக்காம ஓட்டுப்போடுங்க நண்பர்களே....!

அன்பின் நா.நிரோஷ்.

Comments

  1. ஆரமை
    "நூறு வீதப்படி
    காதல் கடன்
    தந்தவள் நீ...!!!
    எப்படியும் திரும்ப
    கேட்டுவிடுவாய்
    கவலைதான்....!.."

    தொடரும் வரிகள்
    மேலும் இனிமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.