இனி விடியும் நல்ல பொழுது....!
காதலி நிலவிற்கு...! உனைநித்தம் நினைத்து நிழலாய் போன நிஜக்காதலன் எழுதிக்கொள்வது...!
இது நானாக எழுதும்கவிதை அல்ல, உன்முகம் அழகென்ற அனுதினமும் அலட்டிக்கொண்ட என் இரு கண்களும் எனைஇரங்கி வேண்டியதால் இந்த இறுதி மடல்.....!
நீயொரு அதிசய மலரென்று - உனைநித்தம் நினைத்து நாள்தொறும் ஆயிரம்கவிதைகள் கிறுகியஎன் கைவிரல்கள் எனை கைதொழுது வேண்டியதால் இந்த இறுதி மடல்...!
காரணம் என்னவோ நானறியேன் கண்மணி நீ எனைவெறுத்ததற்கு....? ஆதலால் தினமும் துடிக்கின்றேன் நித்தம் உனைமறப்பதற்கு...!
சுகமான உன் கனவில் தொலைந்துபோன என்உறக்கங்கள் இன்றுவலியான கண்ணீரில்மூழ்கி தத்தளிக்கின்றன..!
உண்ணும் உணவன்றி வேறொன்றும் தொடவில்லையடி என் உள்ளத்தை உன்நினைப் போன்றைத்தவிர....!
ஏனோ இன்று உண்ணும் உணவும் என் உள்ளத்தை தொடமறுக்கின்றது உன் உள்ளத்தைப்போல...!
உன்முதல் சந்திப்பிலே மீண்டும் பிறந்தேன் முழுவதும் மறந்தேன் முகிலோடு பறந்தேன் முற்றும் துறந்தேன் இன்று முதல் முறை இறந்தேன்...!
என்னுயிர் நீ எனைவிட்டு போனபின்பும் உயிரான காதலை உதறித்தள்ளி எறிந்தபின்பும் உன்நினைவு தேடி என்உள்ளம் பறப்பதுஞாயம்தானோ?
நிலவென்று உனைஉரைத்ததற்கு...