Posts

Showing posts with the label கவிதைகள்

நடுநிசி நாயும் நானும்...! (கவிதை)

Image
நிலா முகில் எழில் தென்னோலை தென்றல் மெல்லிசை நடுநிசி நாய்க்கூட்ட ஊளை அத்தனையும் அழகாய் அரங்கேறும் இரவுநேர இன்பப்பொழுதில் ஏன் என் உறக்கம் மட்டும் துன்பப் போர்வைக்குள் துவண்டுகிடக்கின்றது...? **** நனவுகளின் வலி அதிகரித்து கண்கள் கடிகார முட்களோடு குங்க்பு சண்டையிடுகின்றன... எங்கு தேடியும் கிடைக்காத பொருளில் தமிழில் கைகள் கவிதை எழுத துடிக்கின்றன... **** விளங்கவும் முடியாமல் விளக்கவும் முடியாமல் விரல்கள் விளக்கை ஏற்றியும் அணைத்தும் விளையாடி மகிழ்கின்றன... **** சுவற்றுப் பல்லியும் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு என்னிடம் வால் காட்டுகின்றது... என்னிலமை இந்நிலைமை பெண்ணிலமை கண்டு பேதலித்ததால் வந்ததோ.... ஒரு சொல் சுட்டு என்வாழ்க்கை வெந்ததோ....!!! **** என்றும் நட்புடன் நா.நிரோஷ்

என் விழியும் தமிழ் மொழியும் விற்பனைக்கு...!

Image
எ ன் விழிகள் விற்பனைக்கு என் இதயத்தோடு தொடர்பில் இருந்து என்றும் உனைக்காண ஏங்கித்துடிக்கின்றது ஆதலால் என் விழிகள் விற்பனைக்கு...!!! ************************** எ ன் மொழிகள் விற்பனைக்கு நான் ஒரு கோழை என்னால் பேசப்படுவதால் என்றும் அடிமையாகவே உயிர்வாழ்கிறது அதற்கு நிரந்தர விடுதலை வேண்டும் வீரநெஞ்சம் கொண்டவர்களுக்காய் என் மொழிகள் விற்பனைக்கு...!!! ******************* எ ன் யன்னல் நிலவு விற்பனைக்கு தோழியாய் நினைத்து காதல் செய்திபேச காதலி யாருமில்லை காத்திருக்கும் நிலவும் தேய்ந்துபோவது நியாயமில்லை ஆதலால் என் யன்னல் நிலவு விற்பனைக்கு...!!! ************************ எ ன் ஆண்மை விற்பனைக்கு உயிர்தந்த உறவுக்கும் உயிர்கொடுக்கும் உறவுக்கும் உடன்பிறந்த உறவுக்கும் உடன்பிறவா உறவுக்கும் ஒன்றும் செய்திருக்கவில்லை ஆகவே என் ஆண்மை விற்பனைக்கு...!!! ************************ எ ன் முற்றத்து மல்லிகை விற்பனைக்கு முகர்ந்து பார்த்திடவும் மூச்சின்றி தவிக்கின்றேன் முன்பனியில் நனைந்தும் சுடும்வெயிலில் வாடியும் வ...

கண்கள் சொல்லும் கவிதை...!

Image
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!! ஐயோ....!!! இனி நீ தூங்கும் வேளையில் துவண்டுவிடுமே என் கவிதையும்...! விழித்திரு... கவிதை கொடுத்திரு... காலமுள்ளவரை உன் விழிசொல்லும் கவிதையை திருடியபடி என் மொழிசொல்லும் கவிதையும்...!!! நட்புடன், நா.நிரோஷ்.

கிளிகள் உன் விழிகள் மொழிகள்...!

Image
கி ளிகள் உன் விழிகள் பேசுகின்ற அழகினை சிறப்பித்துக்கூற என்குதேடியும் கிடைக்கவில்லையே... என் கவிதைக்கான மொழிகள்...!!! ********************************* எ ன்னைப்போல என் வீட்டு ரோஜாவும் ஏமாற துடிக்கின்றது... அவள் கூந்தல் போலி என்று அறியாமல்...!!! ********************************* க ல்நெஞ்சம் கொண்ட உன் காதலுக்கு நான் காத்திருப்பதனால்... இப்போதே கல்லும் மலரும் காத்திருக்கின்றன என் கல்லறைக்காய்..!!! ********************************* நட்புடன், நா.நிரோஷ்.

ஏன் உலையாய் கொதிக்கிறாய்..?

Image
ஏ ன்.....! உலையாய் கொதிக்கிறாய்... ? உள்ளம சுடுகிறாய்... ? எல்லாம் தெரிந்தும் சிலையாய் நிற்கிறாய்...! என்னை இடிக்கிறாய்..!!! அருகில் வந்தால் அலையாய் அடிக்கிறாய் ...! எனை அடியோடு ஒழிக்கிறாய்...!!! பூக்கள் தருகிறேன் இலையை பறிக்கிறாய்...! எறும்பாய் வந்தால் ஏறி மிதிக்கிறாய...!!! இலவசம் என்கிறேன் விலையை கேட்கிறாய்...! விடுமுறை என்கிறேன் வேலை என்கிறாய்....! காதல் மதித்தும் காலால் மிதிக்கிறாய்...! கனவில் மட்டும் ஏன்... ? சுளையாய் சுவைக்கிறாய்...! சுகமாய் வதைக்கிறாய்...! காதல் விதைக்கிறாய்...!!! நட்புடன், நா.நிரோஷ்.

உண்டியலில் ஓட்டை போட்டு - பல்சுவை கவிதைகள்

Image
*** *** *** *** *** *** *** என் குறை நிறைகள் எல்லாம் உங்கள் கருத்துக்களாக இங்கே பூக்கட்டும்....! அப்படியே வாக்களிக்க மறந்திடாதிங்க...!

காதலின் மகத்துவம்..! ஒரு மருத்துவம்..!

Image
* காதல்தான் நம் இதயத்தை சுறுசுறுப்பாக வைத்துள்ளது. ================= * காதலில்தான் ஆண்மாவின் உண்மையான அழகு உள்ளது. ================= * ஆண் பெண்ணின் முதல் காதலாகவும் , பெண் ஆணின இறுதி காதலாகவும் இருந்தால் என்றும் அழிவில்லை. ================= * ஆண்மா காதலர்களின் உதடுகளில் மட்டும்தான் இன்னொரு ஆண்மாவை சந்திக்கின்றது. ================= * காதல் என்பது கைத்தடி போன்றது , அது நாம் நடப்பதற்கு மட்டுமல்ல , நல்ல திருமணத்தின் நுட்பத்தையும் திறக்கின்றது. ================= * காதலில் மட்டும்தான் பொய்கள் அதிக அளவில் அழகுபெறுகின்றன. ================= * உண்மையான காதல் எது பொய் எது மெய் என ஆராய்ந்து பார்க்காது , அப்படி பார்த்தாலும் பெரிதாக அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாது. ================= * காதல் கொண்ட நெஞ்சம் ஒரு பட்டாம்பூச்சி போன்றது , அது எங்கு சென்றாலும் , எந்த நிலையில் இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தியே இருக்கும். ================= * காதலில் மட்டும்தான் காதலை காதலாக கற்றுக்கொள்ள முடியும். ================= காதலுக்கு கண்கள் இல்லை , காதல் குருடானது என்றால் கல்யாண...

மச்சான பாத்திங்களா... பதிவுலக தோப்புக்குள்ள..!

Image
மொக்கை மாமா மொக்கை மாமா நான் அத்தை பெத்த பொண்ணு மாமா... வித்தை எல்லாம் தெரிஞ்சு வச்சு சும்மா வீணாக போகும் மாமா...!!! ++++ வேட்டிய மடிச்சு கட்டும் மாமா வெட்டியா திரியும் மொக்கு மாமா நடமாடும் நாட்டு கட்ட மாமா நாடி வருது கிட்ட மாமா...!!! வளர்ந்து நிற்கும் புல்லு மாமா வசதி வந்தா வெட்டு மாமா.... வாடி நிற்கும் பொண்ணு மாமா நாடி வந்து தட்டு மாமா....!!! +++ வீட்டுக்குள்ள புலி மாமா என் சேலையில ஒளி மாமா என் முகத்தில முழி மாமா மாறும் உனது முழி மாமா...!!! +++ காலையில கஞ்சி மாமா மாலையில வஞ்சி மாமா ஆசையில கொஞ்சு மாமா நான் ஆசை வச்ச மொக்கை மாமா...!!! அத்தைக்கிட்ட சொல்லு மாமா ஆடி வந்து கொல்லுது மாமா தேடிவந்த செல்வம் மாமா ஓடி வந்து அள்ளு மாமா...!!! நிலாக்காயும் நேரம் மாமா விழாப்போகனும் நில்லு மாமா அரிசி மூட்டை தூக்கும் மாமா இந்த அழகி மூட்டை தூக்கனும் மாமா..!!! +++ குறும்பு மீசை கரும்பு மாமா இந்த எறும்பு ஆசை எப்ப மாமா ஓசை இல்லா நேரம் மாமா என்ன ஒருதரம் நினைச்சு பாரு மாமா...!!! வெடள புள்ள ஆசை மாமா விடாம உன்ன துரத்தும் மாமா வேலி போட ...

அத்தான் என் அத்தான் - இரு காதல் கவிதைகள்

Image
வி த்தாகி மலர்க்கொத்தாகி காய்த்து கனிந்திருந்த உங்கள் காதல் உள்ளம, பித்தாகி பிரிவாகி இன்று கல்லாகிப்போன மாயம் என்ன...? என் கண்ணீரும் கவிதைபேசுதே காதல் சொல்ல....!!! அத்தான் என் அத்தான்...!!! +++++++++++++++++++++++++++++ க விதை தேன்வடியும் காகித பூ கொண்டு என் காதல் சொல்கிறேன்... நேசிக்காவிடினும் வாசித்தாவது விடு...!!! பூஜிக்காவிடினும் பரவாயில்லை... புன்னகை சிந்திவிடு...!!! நீ.. சுவாசிக்கின்ற காற்றில் நட்பின் வாசம் உண்மையாய் இருக்குமானால்...!!! +++++++++++++++++++++++++++++ "உங்கள் வாக்குகளால் என் வார்த்தைகள் கவிதைகளாய் இங்கே பூக்கட்டும்" நட்பின், நா.நிரோஷ்.