கையில் ரோஜா... காலில் செருப்பு..!


பார்வையறியும்
முள்ளொன்று
பாதத்தில் பாயாமலிருக்க
பாதணி இருக்கு....!!!

பாவையின்
பார்வை விடுகின்ற
பார்வையறியாத
காதல் அம்பு தடுக்க
எங்களுக்கு என்ன
கவசம் இருக்கு....!!!

காதல்
விரும்பாத
கன்னியொருத்தி
காற்செருப்பை
கையில் எடுத்தால்
அதில் ஞாயம் இருக்கு..!!!

காதல் சொல்ல நாங்கள்
கையில் ரோஜா
எடுத்தால் அதில்
என்ன தப்பு இருக்கு....!!!



நண்பர்களே பிடித்திருந்தா ஓட்டுப்போட மறக்காதிங்க......

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.