நீ+நான்+காதல்=???


நீயும் நானும்
எப்போதும்
தொலைதூரமாய்....!!!
அதனால்தான்
மனம் பாரமாய்...!!!

என் கவிதைகளில்
என் கற்பனை
உனக்கு முதலிடம்தர
முனைகின்றது,
நீ முன்னாடியே
முற்றுப்புள்ளி
வைத்ததை
அறியாமல்....!!!

காதலில்
எது ஆரம்பம்
எது முடிவு
கருத்துக்கூற
உன்னாலும் முடியாது
என்னாலும் முடியாது...!!!

அதனால்தான்
என்னவோ
காதலை
அழிக்கமுடியாது
நாம் அழிந்துபோனாலும்....!!!




"நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதை"
நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.