சுடச்சுட சுட்ட பாடல்...! (Money Money Money... Ummah..!)


சுடச்சுட சுட்ட பாடல்
சுகம்தரும் நல்ல பாடல்...!
பணத்திற்காய் இட்ட பாடல்
படத்தினில் இல்லாத பாடல்
கேட்காத ஊரும் இல்ல
பாடாத வாயும் இல்ல...!

சுடச்சுட சுட்ட பாடல்
சுகம்தரும் நல்ல பாடல்...!

பசிவந்தா பத்தும் பறக்கும்
பணம்வந்தா பசியும் பறக்கும்
கசிந்திடும் காதல் கூட
காசு இல்லைன்னா காலியாகும்
போலியான உறவுகூட
வேலியாக மாறி நிற்கும்...!!!

சுடச்சுட சுட்ட பாடல்
சுகம்தரும் நல்ல பாடல்...!

சாந்தம்கொண்ட சாமியாரும்
காசுகண்டால் வாய்பிளக்கும்
கல்லானா கடவுள்கூட
காசுக்காக கல்லுடைக்கும்
கற்புகள் கூட இங்கு
காசுக்காய் விலை பறக்கும்...!!!

சுடச்சுட சுட்ட பாடல்
சுகம்தரும் நல்ல பாடல்...!

காசுக்காய் கல்யாணம்
பணத்திற்காய் படுக்கையறை
பிணம்கூட பணமென்றால்
நடந்திங்கு வந்திடுமே
பிணந்தின்னும் கழுகுபோல
மனித மனந்தின்னும் காசு இங்கே....!!!

சுடச்சுட சுட்ட பாடல்
சுகம்தரும் நல்ல பாடல்...!

மகத்தான மனிதமனம்
பணத்தாலே மிருககுணம்
குணத்தாலே உய்த்த இனம்
பணத்தாலே அழியுது தினம்
பண்டமாற்று சாதனம்
உலகை படைப்பதுதான் வேதனை...!!!

சுடச்சுட சுட்ட பாடல்
சுகம்தரும் நல்ல பாடல்....!!!

நண்பர்களே பாடல் பிடித்திருந்தா கருத்தும் வாக்கும் இலவசமா போட்டுவிட்டு போங்க...!

நட்புடன்,
நா.நிரோஷ்.



Comments

  1. அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை (குறள் - 247) என்ற குறள் தான் நினைவுக்கு வந்தது நண்பா..

    சிந்தனைக்குரிய பாடல் அருமை..

    ReplyDelete
  2. பொருள் சேர்ப்பது பெரிய செயல் அல்ல…
    பொருளை நேர்வழியில் சேர்ப்பது மிகப்பெரிய செயல்!!

    பொருளை சேமிப்பது அரிய செயல் அல்ல…
    சேமித்த பொருளை நல்ல வழியில் செலவுசெய்வது அரிய செயல்!

    பொருளின் மதிப்பைவிட..
    அந்தப் பொருள்வழி மதிப்புமிக்க உறவுகளைச் சேமிப்பதுதான் மதிப்பு!!

    ReplyDelete
  3. சுடசுடசுட்டப்பாடல் இனிய பாடல்

    ReplyDelete
  4. //அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை (குறள் - 247) என்ற குறள் தான் நினைவுக்கு வந்தது நண்பா..

    சிந்தனைக்குரிய பாடல் அருமை..

    பொருள் சேர்ப்பது பெரிய செயல் அல்ல…
    பொருளை நேர்வழியில் சேர்ப்பது மிகப்பெரிய செயல்!!

    பொருளை சேமிப்பது அரிய செயல் அல்ல…
    சேமித்த பொருளை நல்ல வழியில் செலவுசெய்வது அரிய செயல்!

    பொருளின் மதிப்பைவிட..
    அந்தப் பொருள்வழி மதிப்புமிக்க உறவுகளைச் சேமிப்பதுதான் மதிப்பு!!//

    அருமையான விளக்கக்கருத்துக்கள் முனைவரே... வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  5. //சுடசுடசுட்டப்பாடல் இனிய பாடல்//

    நன்றிகள் செந்தில் குமார் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...!

    ReplyDelete
  6. நன்றிகள் தாங்கள் முதல் தடவையாக வந்துள்ளீர்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. நல்ல பாடல் நண்பரே...

    ReplyDelete
  8. நன்றிகள் தினேஷ்குமார்.....!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.