என் FACEBOOK மொக்கைகள் - II



நவீன சந்தையில் நன்றாகத்தான் விலைபோகின்றது நட்பும் காதலும்...! நானும் நன்றாகத்தான் விதைத்து வைத்திருக்கிறேன்...
யாரவது வாங்க முன்வந்தால் நல்ல விலைக்கு தருகிறேன்...
FACEBOOK சொல்கிறது...!

*************

மழை நின்ற பின்னே குடை தந்து செல்வாள்....!
பல்போன பின்னே பக்கோடா தருவாள்....!

*************

‎அங்கே வயல்வெளியில் நிம்மதி புதைந்துகிடக்கிறது.... இங்கே பாலைவனத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்...!!!

*************


*************

"முன்னே நிற்கின்றேன் வார்த்தை மொட்டுகிறாய்...
மொபைலில் மட்டும் SMS ஆக கொட்டுகிறாய்"
*************

இஷ்டம் இல்லாக்காதலில் துஷ்டனாய் நான்....
சாதுவாய் வந்து சாந்தம் தந்தாய்...
இப்போதெல்லாம் ஒரே நாமம் காதலே சாந்தி சாந்தி என்று...!!!

*************

மழைகாலத்தில் அவிக்கப்பட்ட மரவள்ளி கிழங்காய், வெயில்காலத்தில் வெடிக்கப்பட்ட வெள்ளரி பழமாய்.... என்றும் என்மனது எங்கள் ஊர் மண்வாசத்துடன்....!

*************

முட்கம்பிகளுக்குள் நிலா, முடிந்தவரை போராடினேன் மீட்பதற்கு, கைதொட்டு காப்பாற்றும் தூரம் சென்றபின்.... நிலா சொல்கிறது... உன் கைகளில் ரத்தக்காயம்.... எனை தொட்டுவிடாதே என்று..!!!

*************

பால் விளக்கேற்றும் நிலா... பாய்விரித்த திண்ணை...
அன்னை பிசைந்த சோறு...
அனைவரும் ஆவலுடன்....
இனிய மாலை வணக்கங்கள்.....!!!

*************

‎"பசுதந்த பாலில்... பாசத்தோடு அம்மா தந்த தேநீரில்...
FB நண்பர்கள் இனிப்பாக...
அழகிய காலை நேர வணக்கங்கள்.."

*************


*************

ஆழம் அறியாமல் காலை வைப்பதும், அன்பிலா நெஞ்சில் ஆசை வைப்பதும், யாமறியோம் FB நண்பர்களே.....!!!

*************

எல்லோரும் நல்லாத்தான் கூடி இருந்து கும்மியடிப்பானுகள்...
எங்கிருந்தோ ஒரு "missed call" வரும்...
எப்படித்தான் பிரிந்து போறானுகளோ தெரியாது....!

*************

தார் வீதிகளில் தடம்பதித்து கிடக்கும் போத்தல் மூடிகளாய்...
நண்பர்களின் அன்பு நினைவுகள் எந்தன் இதய வீதியிலே....!!!

*************

கட்டாரில் கடும் மழை... காய்ந்த கட்டிடமும், கருவாட்டு மணல்களும் கைகொட்டி வரவேற்கின்றன....:)))

*************

மெல்லியமேக உடையணிந்த அழகிய நிலவொன்று அவிழ்ந்துவிழும் ஆடைதேடி அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றது வான்வீதியிலே... என் கவிக்கண்கள் உற்றுநோக்கியத்தை உணர்ந்த தென்னோலைகள் மறைக்க முயன்றாலும்.... என்மூச்சுக்காற்று தென்றலோடு கலந்து தென்னோலையை தடுக்க.... நிலவை ரசித்தபடி கவிதை இசைக்கின்றது என் கைகள்...!

*************

காத்திருக்க தெரியாத நேரம் கதிகலங்கி ஓடுகிறது...
கையில் பூத்திருந்த பூவும் புண்பட்டு வாடுகின்றது...
உன் கண்கள் காணாத என் கவிதைகளும் கண்ணீரில் கசிகின்றது...
ஏனோ இன்னும் உன் மொழி, முகம், பார்வை எல்லாம் மௌனத்தின் போர்வைக்குள் மல்லுக்கட்டுகின்றது....?

*************


*************

‎***என்னையறியாமல் என் இதயத்தை திருடும் வித்தை அறிந்த உன்னிடம்... நீ உன்னை அறியாமலாவது என்னை பிடிக்கும் என்றுரைப்பாய் என எதிர்பார்ப்பது என்னுடைய முட்டாள்தனம்தான்***

*************

‎"அன்று விரிக்கப்பட்ட சிறகாய்.... இன்று எரிக்கப்பட்ட விறகாய்...
இரண்டும் உன்னால்தான்... எப்போது சொல்... நீ என்னவானவள் என் மனதிற்கு"

*************

‎"தொல்லைகள் போக்கும் வில்லைகளாய் நம் நட்பிருக்க...
மகிழ்வில் எல்லைகள் அற்ற பிள்ளைகளாய் நீங்கள் இருக்க....
என்றும் எங்கள் இதயவாசலில் நட்பு முல்லைகளாய் பூத்திருக்க...
அன்பின் நல்ல உள்ளங்கள் என் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..."

*************

ஒரே பொட்டையும் ஒரே பூவையும் நீ தொடர்ந்து வைத்திருந்தால்..
என் காதல் பயணத்தின் காலத்தை அவைகள் சொல்லியிருக்கும்...!!!

*************

புதினம் பார்க்க போனபோது.. புழுதிக்காற்று புயலாய் வீச, கதிகலங்காத என்கண்கள்... உனை மட்டும் உற்றுபார்த்தபடியே உள்ளன....:)

*************


*************

உன் heart book இன் wall இல் என்னைப்பற்றிய post ஐ நீ paste செய்ய விரும்புவதில்லை... ஆனால் என் face book இன் wall இல் உன்னைப்பற்றிய post ஐ தவிர நான் வேறொன்றும் paste செய்வதில்லை...!!!

*************

காதல் பிசாசு ஒன்று பதுங்கியிருந்து பாடாய்படுத்துவதனால்.. தாய்வீட்டுசீதனமாய் இருந்த என் இதயவீடு.. 13ம் நம்பர் பேய்வீடுமாதிரி போய்விட்டதே...!!!

*************

‎நான் மீண்டும் ஒரு கடனாளியாகவே பிறக்கவேண்டும்... அம்மா உன் விலைமதிப்பற்ற அன்புசெல்வத்தை பெறுவதற்காக... எனை மீண்டும் ஒருமுறை பெற்றெடுப்பாயா...?

*************

ஆபாசம் தெரியாத என் கவிதைக்கு யாரோ ஆப்பு வைத்துவிட்டார்கள் போலும்... அரை குறை ஆடையில் யாரோ கனவில் வருவதாய் உளருகிறது....!

*************

பூவோடு உரசிவரும் தென்றல் என்மீது புயலாய் வீசுது...!
இரவோடு பேசிவரும் திங்கள் என்னிடம் வெயிலாய் பாயுது...!

*************

ஈர்ற்கு வாருவலின் இடைநடுவே சிக்கியிருக்கும் அழுக்குத்துண்டுகள்..! சிதைந்த கல்லில் பட்டு சிதறுகின்ற சிறுநீர்த் துளிகள்...! எனது அடுத்த கவிதையின் ஆரம்ப வரிகள்....

*************


*************

"கண்ணீர் ஏன் இனிக்கின்றது... கன்னத்தில் எறும்பு நகர்கின்றது..."

*************

"கவிதையில் தொலைந்ததா உன்மனம்....
என் கவிதை போல் இல்லையா என் மனம்..."

*************
உன்னோடு முட்டிமோதும் அளவிற்கு வலு இல்லை என்னிடத்தில்... ஆனால் அழியாத அன்பும் நட்பும் இருக்கின்றது உனை என்றும் நான் ஜெயிக்க....!

*************

உருவத்தில் நீ... உறவில் நண்பன்....
உணர்வில் சிரிப்பு.... எனக்கு என்றும் பிடித்தவை....:))

*************

என்னுள் பொய்யாக கலந்து கிடக்கும் உன் நினைவுகளை... கண்டுபிடித்து மெய்யாக்க முயல்கின்றான் என் நண்பன் காதல் கிசுகிசு மூலம்...!

*************

வேலைப் பளுவில் விழித்திருந்த கண்கள் தூக்கத்தை அழைக்கின்றன... ஐயோ.... மீண்டும் தொலைபேசி அடிக்கின்றன....:((

*************

என் அம்மா புலம்புகிறார்....
"பள்ளிக்கூடத்தில கொடுத்த பாடப்புத்தகத்தையே திறந்து பார்க்காத இவன் இந்த facebook ல விடியவிடிய இருந்து அப்படி என்னதான படிக்கானோ தெரியல...."

*************


*************

தயவுசெய்து பார்க்காதே...
வதைசெய்து போகாதே...
கண்சிமிட்டாமல் கதிரவனை பார்த்தவன்...
உன் கடைக்கண் பார்வையில் காணாமல் போகிறேன்...

*************

‎இதயம் இருள்சூழ்ந்து கிடக்கின்றது....
என்னவள் வந்து காதல் தீபம் ஏற்றும்வரை...!


*************

"நேற்றிரவு ஒரு கொடுங்கனவு... கிடுகிடுன்னு யாரோ கிட்டவந்து காதல் சொன்னதாய் ஒரு நினைவு... நல்லவேளை கண்முழித்தேன்...
காதல் பிசாசிடம் இருந்து தப்பித்தேன்..."

*************

"என் தமிழ் தரா மொழி... என் கண்கள் கண்டிரா மொழி... என் கவிதைகள் சொல்லா மொழி.... காதலி உன் மௌனமொழி....."

*************

நீ முத்தமிட்டு குடித்த தேநீர் கோப்பை எனை ஏக்கத்துடன் பார்க்கின்றது.... "மறுபடியும் அவளை எப்போது அழைத்து வருவாயென்று"

என் சிரிச்ச மூஞ்சிக்கு அழத்தேரியாது....
யாரும் என் காதலிடம் சொல்லிவிட வேண்டாம்...

*************
என் கற்பனையில் காதல் கத்திவைத்து மிரட்டி கவிதை எழுதச்சொல்கிறது உன்னைப்பற்றி மட்டும்....

*************


நட்பா காதலா கடும்போட்டி நிலவுகிறது...
நட்பை நோக்கியே என்மனமும் நகர்கிறது...:))

*************


*************

என்னதான் செய்யப்போற... ஏன் எனை கொன்றுபோடுற....
கண்ணுக்குள்ள வந்து நின்று கனவில குண்டுபோடுற.....

*************

காதல் செய்யப்போறன் உன்ன காதல் செய்யப்போறன்
காலில் உள்ள செருப்ப கழட்டாதே...!
கைப்பிடிக்கபோறன் உன்ன கைப்பிடிக்கப்போறன்
கண்ணுக்குள்ள முள்ளை வைத்து குத்தாதே..!

*************

உன் பூமுகம் மோதிய புயலொன்று தென்றலாய்மாறி என்னிடம் சொன்னசெய்தி சொல்லவா...? உன் புன்னகையில் நான் தொலைந்துபோன பொருளும் அதேதான் அல்லவா...!

*************

நண்பர்களே என் குறை நிறைகள் எல்லாம் உங்கள் கருத்துக்களாக இங்கே பூக்கட்டும்.... மறக்காம ஓட்டு போட்டிருங்க பாஸ்...!

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

  1. //அங்கே வயல்வெளியில் நிம்மதி புதைந்துகிடக்கிறது.... இங்கே பாலைவனத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்...!!!//

    இதை நான் சுட்டுவிட்டேன், என் FB status'ஆக...

    ReplyDelete
  2. நல்லது நண்பா... நீங்களும் எங்கேயோ பாலைவன நாட்டில் பணத்திற்காக பரந்து வந்திருக்கிறீர்கள் போலும்.... நன்றிகள்...!

    ReplyDelete
  3. //நீ முத்தமிட்டு குடித்த தேநீர் கோப்பை எனை ஏக்கத்துடன் பார்க்கின்றது.... "மறுபடியும் அவளை எப்போது அழைத்து வருவாயென்று"//

    வரிகள் அருமை

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  4. நன்றி சம்பத், தங்களின் வருகைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி...!

    ReplyDelete
  5. நானும் உங்கள் கவிதைகளை திருடிவிட்டேன்,
    உங்கள் அனுமதியின்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.