ஏன் உலையாய் கொதிக்கிறாய்..?


ன்.....!

உலையாய் கொதிக்கிறாய்...?

உள்ளம சுடுகிறாய்...?


எல்லாம் தெரிந்தும்

சிலையாய் நிற்கிறாய்...!

என்னை இடிக்கிறாய்..!!!


அருகில் வந்தால்

அலையாய் அடிக்கிறாய் ...!

எனை அடியோடு ஒழிக்கிறாய்...!!!


பூக்கள் தருகிறேன்

இலையை பறிக்கிறாய்...!

எறும்பாய் வந்தால் ஏறி மிதிக்கிறாய...!!!


இலவசம் என்கிறேன்

விலையை கேட்கிறாய்...!

விடுமுறை என்கிறேன்

வேலை என்கிறாய்....!

காதல் மதித்தும்

காலால் மிதிக்கிறாய்...!


கனவில் மட்டும் ஏன்...?

சுளையாய் சுவைக்கிறாய்...!

சுகமாய் வதைக்கிறாய்...!

காதல் விதைக்கிறாய்...!!!

நட்புடன்,
நா.நிரோஷ்.


Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.