கிங்கிணி கிழங்குக்கடை : பூஜா ஹில்மா படம் படுத்தியபாடு..! (இளந்தாரிகளுக்கு மட்டும்)



கிங்கிணி : வா சகோதரம்.. கடலை சாப்பிடுறாயா..?

சகோதரம் : வேணாம் அண்ணே.... எனக்கு பசிக்கல....

கிங்கிணி : போப்பா உனக்கு கடலையும் சாப்பிட தெரியா.... கடலையும் போடா தெரியா...!

சகோதரம் : சும்மா போங்க அண்ணே கடுப்பேத்தாம....!

கிங்கிணி : என்ன சகோதரம்....? முகம் வாழைக்குலை போல தொங்குது...?

சகோதரம் : ஒண்ணுமில்ல அண்ணே, மனசு சரியில்ல...!

கிங்கிணி : என்ன மனசு சரியில்லையா...? அடியே யாருக்கிட்ட ரீல் விடுற...?

சகோதரம் : கிண்டல் பண்ணாதீங்க அண்ணே.. நானே மனசு ஓடைஞ்சு போயி இருக்கன்..!

கிங்கிணி : என்னப்பா சொல்லுற.. என்ன நடந்திச்சு...? காலையில நேரத்தோட எழும்பித்தாயா...?

சகோதரம் : இல்லை அண்ணே...

கிங்கிணி : காலையில பியருக்கு பதிலா, காப்பிய..கீப்பிய குடிச்சு தொலைச்சயா..?

சகோதரம் : இல்லை அண்ணே...

கிங்கிணி : நைனா ஏதும் திட்டாம மாமுல் தந்தாரா..?

சகோதரம் : இல்லை அண்ணே...

கிங்கிணி : மொளிச்சவுடனேயே மூஞ்சிபுத்தகத்தில முழிக்காம விட்டாயா..?

சகோதரம் : இல்லை அண்ணே....

கிங்கிணி : ஐயோ என்னடா நடந்திச்சு... பரிட்சையில ஏதும் பாஸ்பண்ணி தொலைச்சிதாயா...?

சகோதரம் : இல்லை அண்ணே...

கிங்கிணி : வேலைவெட்டி ஏதாச்சும் பாக்க போனியா..?

சகோதரம் : இல்லை அண்ணே...

கிங்கிணி : நம்ம பசங்க ஏதாச்சும் நல்ல விஷயம் சொன்னாங்களா..

சகோதரம் : இல்லை அண்ணே...

கிங்கிணி : ஐயோ சாமி முடியல என்னடா நடந்திச்சு...?

சகோதரம் : முடியல அண்ணே.. உங்க சிஷ்யன் எண்டு சொல்லவே எனக்கு தகுதி இல்ல....

கிங்கிணி : ஐயோ என்னை வேறு எழுக்குறானே... அப்படி என்னடா நடந்திச்சு...? டேய் யாராச்சும் புள்ளைங்க முகத்தில காறி துப்பிச்சடா..?

சகோதரம் : இல்லை அண்ணே...

கிங்கிணி : ஏதாச்சும் நல்ல பிகருக்கு லவ் லெட்டர் கொடுத்தியா...?

சகோதரம் : யோவ்வ்வ்வ்வ்வ்....

கிங்கிணி : சரி சரி முறைக்காத... அப்ப சொல்லித்தொலையண்டா....

சகோதரம் : இல்லேன்ன, போனவாரம் நம்ம நடிகை பூஜாவோட ஹில்மா படம் ஒன்னு நெட்டில கிடைக்குதுன்னு சொன்னாங்க...

கிங்கிணி : அதுக்கு..??????

சகோதரம் : அதான் ஒருவாரமா ஒக்காந்து டவுண்லோட் பண்ணி பார்க்க தேடினன்... ஆனா எவ்வளவு றை பண்ணியும் முடியலன்னே முடியல...

கிங்கிணி : ஓ.. அதுக்குத்தனா இந்த அலப்பறை...?

சகோதரம் : ம்ம்ம்ம்..

கிங்கிணி : ப்பூஊஊஊஊஸ்.... எக்கீஸ்மீ ப்றோதர்ஸ்... எல்லோரும் கொஞ்சம் வெளிய போங்க..... “மவனே இன்னைக்கு நீ செத்தடா...”

சகோதரம் : ஐயோ அண்ணே.. குத்தாதீங்க. அதான் அவங்க எப்படியும் படிச்சித்து கண்டாகி.. ஓட்டு குத்தப்போறாங்களே.....

கிங்கிணி : ஓ இதுல உனக்கு அதுவேறையா...?

--------------------------------------------------------------------

நட்புடன்,

நா.நிரோஷ்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.