காதலின் மகத்துவம்..! ஒரு மருத்துவம்..!


* காதல்தான் நம் இதயத்தை சுறுசுறுப்பாக வைத்துள்ளது.

=================

* காதலில்தான் ஆண்மாவின் உண்மையான அழகு உள்ளது.

=================

* ஆண் பெண்ணின் முதல் காதலாகவும், பெண் ஆணின இறுதி காதலாகவும் இருந்தால் என்றும் அழிவில்லை.

=================

* ஆண்மா காதலர்களின் உதடுகளில் மட்டும்தான் இன்னொரு ஆண்மாவை சந்திக்கின்றது.

=================

* காதல் என்பது கைத்தடி போன்றது, அது நாம் நடப்பதற்கு மட்டுமல்ல, நல்ல திருமணத்தின் நுட்பத்தையும் திறக்கின்றது.

=================

* காதலில் மட்டும்தான் பொய்கள் அதிக அளவில் அழகுபெறுகின்றன.

=================

* உண்மையான காதல் எது பொய் எது மெய் என ஆராய்ந்து பார்க்காது, அப்படி பார்த்தாலும் பெரிதாக அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாது.

=================

* காதல் கொண்ட நெஞ்சம் ஒரு பட்டாம்பூச்சி போன்றது, அது எங்கு சென்றாலும், எந்த நிலையில் இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தியே இருக்கும்.

=================

* காதலில் மட்டும்தான் காதலை காதலாக கற்றுக்கொள்ள முடியும்.

=================

காதலுக்கு கண்கள் இல்லை, காதல் குருடானது என்றால் கல்யாணம் கண்களை திறந்து வைக்கின்றது.

=================

காதல் ஒரு போர் போன்றது தொடங்குதல் மிக இலகுவானது முடிப்பதுதான் கடினமானது.

=================

* காதல் ஒரு தற்காலிக பைத்தியம் அதை திருமணம் எனும் வைத்தியத்தால் குணப்படுத்தலாம்.

=================

* காதல் வாழ்க்கையில்தான் மனம் ஒரு உன்னதமான உணர்வை உணர்க்கின்றது.

=================

* காதல் இல்லாத வாழ்க்கை மலரும், கனியும் இல்லாத ஒரு மரம் போன்றது.

=================

* காதலில் மட்டும்தான் மௌனமொழி தேசிய மொழியாகின்றது.

=================

* காதலில் மட்டும்தான் இனம், மொழி, கலாச்சாரம் என அனைத்தும் ஒருமைப்படுகின்றது.

=================

* காதல் ஒரு விஷம், தண்டனை என்றால் அதை அனுபவிக்கும்போது மட்டும்தான் வாழ்வின் உச்ச மகிழ்ச்சியை உணர முடிகின்றது.

=================

என்ன நண்பர்களே காதல் என்றால் சும்மா இல்லை,
இந்த நல்ல விடயம் நான்கு பேரை சென்றடைய வேண்டும் என்றால், இந்த பதிவுக்கு வாக்களித்து செல்லுங்கள்.

நட்புடன்,

னா.நிரோஷ்.


Comments

  1. ஆகா வாழ்த்துக்கள் சகோ .காதலுக்கு ஆதரவாக அருமையான தத்துவ மழையைப் பொழிந்துள்ளீர்கள் இங்கு நனைந்தவர்கள் என் தளத்தில் வாழ்கின்றனர் போலும் வாருங்கள் உங்கள் வாழ்த்தைச் சொல்லுங்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...........

    ReplyDelete
  2. ஓட்டுகள் மூன்றும் போட்டாச்சு .முதல்
    வாழ்த்தும் இன்று எனதோ ...........!

    ReplyDelete
  3. காலம் என்னும் பாத்திரத்தில் என்றும் தீராமல் நிறைந்து வழிகிறது காதல்..

    ReplyDelete
  4. நன்றிகள் வருகைதந்து வாக்களித்து வாழ்துச்சொன்ன இருவருக்கும்... என்றும் என் வருகை உங்கள் வலைத்தளம் மீது இருந்துகொண்டே இருக்கும்...!

    ReplyDelete
  5. காதலில் மட்டும்தான் பொய்கள் அதிக அளவில் அழகுபெறுகின்றன
    இது மறுக்க முடியாத உண்மை நண்பரே

    இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    ReplyDelete
  6. காதல் கசிகிறது!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. காதலுக்கோர் வரையறைகள்
    இங்கே வரைவிக்கப்பட்ட
    இலக்கணமாய்......
    நல்லா இருக்கு நண்பரே....

    ReplyDelete
  8. //காதலில் மட்டும்தான் பொய்கள் அதிக அளவில் அழகுபெறுகின்றன
    இது மறுக்க முடியாத உண்மை நண்பரே//

    நன்றிகள் சதீஷ்.

    ReplyDelete
  9. //காதல் கசிகிறது!//

    நன்றிகள் மகேந்திரன்...!

    ReplyDelete
  10. //காதலுக்கோர் வரையறைகள்
    இங்கே வரைவிக்கப்பட்ட
    இலக்கணமாய்......//

    நன்றிகள் மகேந்திரன்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.