உன் நினைவால் கருவுற்றேன்...!



காதல்
வரம் கிடைத்தும்
இன்னும்
தனிமையில்
தவம் கிடக்கிறேன்
உனை கரம
பிடிக்கும்வரை....!!!

நீ
கவிதைகள்
எழுதியே
காலம்
கடத்துகிறாய்....!
நான்
கனவு கண்டே
நாட்களை
நகர்த்துகிறேன்...!!!

இனிமையும்
கொடுமையும்
இஷ்டம்போல்
விளையாடும்
தனிமையில்....
என்ன கஷ்டம
வந்தாலும்
உன் நினைவுகளால்
கருவுற்ற
காதல்
குழந்தையை
சுமந்தபடி
என் காத்திருப்பு
தொடர்கிறது...!!!

**************************************

அன்பின் நண்பர்களே தங்கள் வாக்குகளை வீசி விடுங்கள் என் கவிதைகள் கண்டுகொள்ளும்....

நட்புடன்,
ந.நிரோஷ் .

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.