முருங்கைக்காய் பார்த்தால் திருமண ஆசை வருகிறதா...? - வேச்சுலர்


புதருக்குள் நெளியும் புடையன் பாம்பாய்... உன் புருவம் கண்டவுடன் என் இதயம் மனதிற்குள்...!!!

****

என்ன சொல்கிறாய் ஏன் மெல்கிறாய் எதற்காய் கொல்கிறாய்...?..!!!

****
கடற்கரையில் காதல் பொதிசெய்த காமச்சோறு உண்கிறார்கள் இருவரும் மாறிமாறி #galleface #merina

****
சந்தையில் முருங்கைக்காய் திருமணத்தை நினைவுபடுத்துகிறது #வேச்சுலர்

****
பில்லி சூனியம் ஏவல் ஒன்று சேர்ந்த காதல் என்னோடு இப்போ மோதல்...:(

****

விளம்பரம் :- "நன்றியுள்ள நாய்கள் விற்பனைக்கு உண்டு, யாராவது மனிதர்கள் இருந்தால் அவர்களுக்கு இலவசம்"

****

குடிக்க வாட்டர் இல்லாக் காலங்களிலும் மேட்டரே இல்லாமல் குவாட்டர் கொடுப்பவன்தான் நண்பன்...! #குடிமொழி

****

இன்று எழுந்தவுடன் ராசிபலன் பார்த்தேன் கிழக்குத்திசை போகவேண்டாம் என இருந்தது. அடங்கொய்யாலே வாத்ரூம் அந்த திசையில்தானே இருக்கு..!

****

இன்று பார்த்த கோடூர காட்சி "ஒருத்தர் பருப்பு வடைய டீயில் தொட்டு சாப்பிட்டது"

****

"BATTLESHIP" படம் பார்த்தேன் இட்ஸ் அமேசிங் அட்வென்சர் ஆக்சன் பிலிம் அமெரிக்க பெருமை சொல்லும் படமும் கூட பாருங்கள் ரசிக்கலாம்..!


****

போறவளே பொண்ணுதாயி நான் வரல போதாயி போய் முதல்ல மொபைல் நம்பர் மாத்து தாயி...! #முடியல

****
குடியிருந்த கோயிலில் இடிவிழுந்ததாய் கலையிழந்து கிடக்கிறது காதல் மனது... உன் முட்டாள்தன முடிவு கேட்டு...!

****
பாவம் பசங்க என்று பெண்கள் அன்று நினைத்திருந்தால் இன்று இத்தனை வகை வகையான வசதிகள் வந்திராது ஆண்களுக்கு..! #அவதானிப்பு.

****

அன்பே நீ எனை பார்க்கும்போது "ஆசைய காத்துல தூதுவிட்டு" பாடல் கேட்பதாய் சொன்னாய்.. எனக்கென்னவோ "ஆடி அடங்கும் வாழ்க்கையடா" என்றே கேட்குது..

****

இப்போதே ஒரு நாய் வளர்க்கின்றேன் ஒருவேளை என் கல்லறைக்கு நீ வந்தால் உனை கடிக்கச்சொல்லி..! #காதல் கோபம்.

****

காரணம் இல்லாமல் கண்ணீர் வருகின்றதே மாயம் என்னவோ...? மங்கை உன் மறைமுக தாக்கமோ..? !!!

****

நிலவும் நானும் நீண்ட இடைவெளியின் பின் சந்திக்கின்றோம் இன்று நீ விடுமுறையில் உள்ளதால்....!

****

எனக்கென யோசிப்பதற்கு எஞ்சுகின்ற பொழுதுகளில் எல்லோரையும் விட மிஞ்சுகின்றது உன்னுடைய பொழுதுகள்..!

****

தூங்கச் செல்கிறேன் தாயாய் இருந்து தாலாட்ட காத்திருக்கும் A/C யை இயங்கச் செய்துவிட்டு... #gulflife

****
அழகாய் தெரிகிறது அனைத்தும் அன்பே உன் காதல் விழிகொண்டு பார்ப்பதனால்...!

****
நட்புடன் நா.நிரோஷ்

Comments

  1. சிந்தனைகள் ரசிக்கும்படி இருந்தது. //விளம்பரம் :- "நன்றியுள்ள நாய்கள் விற்பனைக்கு உண்டு, யாராவது மனிதர்கள் இருந்தால் அவர்களுக்கு இலவசம்"// அருமை.

    ReplyDelete
  2. நன்றிகள் விச்சு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...:))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?