Posts

Showing posts with the label இலக்கியம்

புத்த மொழி விழியாளே..!

Image
கொ ல்லாமை எனும் கொள்கை கொண்ட புத்தமொழி விழியாளே...! எனை நித்தம் கொன்று குவிப்பதேன்... ? கூரிய உன் விழியாலே... ??? அரபிமொழி போல அறியாமல் முழிக்கின்றேன்... அமுதமொழி தமிழ்மொழியாய் அரவணைக்க வருவாயா... ? இல்லை , ஆப்பு தந்தே செல்வாயா.... ??? நட்புடன், நா.நிரோஷ்.

ஏன் உலையாய் கொதிக்கிறாய்..?

Image
ஏ ன்.....! உலையாய் கொதிக்கிறாய்... ? உள்ளம சுடுகிறாய்... ? எல்லாம் தெரிந்தும் சிலையாய் நிற்கிறாய்...! என்னை இடிக்கிறாய்..!!! அருகில் வந்தால் அலையாய் அடிக்கிறாய் ...! எனை அடியோடு ஒழிக்கிறாய்...!!! பூக்கள் தருகிறேன் இலையை பறிக்கிறாய்...! எறும்பாய் வந்தால் ஏறி மிதிக்கிறாய...!!! இலவசம் என்கிறேன் விலையை கேட்கிறாய்...! விடுமுறை என்கிறேன் வேலை என்கிறாய்....! காதல் மதித்தும் காலால் மிதிக்கிறாய்...! கனவில் மட்டும் ஏன்... ? சுளையாய் சுவைக்கிறாய்...! சுகமாய் வதைக்கிறாய்...! காதல் விதைக்கிறாய்...!!! நட்புடன், நா.நிரோஷ்.

மச்சான பாத்திங்களா... பதிவுலக தோப்புக்குள்ள..!

Image
மொக்கை மாமா மொக்கை மாமா நான் அத்தை பெத்த பொண்ணு மாமா... வித்தை எல்லாம் தெரிஞ்சு வச்சு சும்மா வீணாக போகும் மாமா...!!! ++++ வேட்டிய மடிச்சு கட்டும் மாமா வெட்டியா திரியும் மொக்கு மாமா நடமாடும் நாட்டு கட்ட மாமா நாடி வருது கிட்ட மாமா...!!! வளர்ந்து நிற்கும் புல்லு மாமா வசதி வந்தா வெட்டு மாமா.... வாடி நிற்கும் பொண்ணு மாமா நாடி வந்து தட்டு மாமா....!!! +++ வீட்டுக்குள்ள புலி மாமா என் சேலையில ஒளி மாமா என் முகத்தில முழி மாமா மாறும் உனது முழி மாமா...!!! +++ காலையில கஞ்சி மாமா மாலையில வஞ்சி மாமா ஆசையில கொஞ்சு மாமா நான் ஆசை வச்ச மொக்கை மாமா...!!! அத்தைக்கிட்ட சொல்லு மாமா ஆடி வந்து கொல்லுது மாமா தேடிவந்த செல்வம் மாமா ஓடி வந்து அள்ளு மாமா...!!! நிலாக்காயும் நேரம் மாமா விழாப்போகனும் நில்லு மாமா அரிசி மூட்டை தூக்கும் மாமா இந்த அழகி மூட்டை தூக்கனும் மாமா..!!! +++ குறும்பு மீசை கரும்பு மாமா இந்த எறும்பு ஆசை எப்ப மாமா ஓசை இல்லா நேரம் மாமா என்ன ஒருதரம் நினைச்சு பாரு மாமா...!!! வெடள புள்ள ஆசை மாமா விடாம உன்ன துரத்தும் மாமா வேலி போட ...

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

Image
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும், கல்வெட்டுச் செய்திகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. கி.பி.18 - ஆம் நூற்றாண்டில் உரைநடை புத்துயிர் பெற்றது. அதன் பின்னர்தான் நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள் தோன்றின. மேலை நாடுகளின் போக்கை ஒட்டி உரைநடையை முதன்முதலாகப் படைப்பிலக்கியத்திற்குப் பயன்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார். இவருடைய பரமார்த்த குரு கதையே தமிழ் உரைநடையில் உருவான முதல் கதையாகும். இதனைத் தொடர்ந்தே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன. இன்று, சிறுகதையைப் படைக்கும் படைப்பாளர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சிறுகதையைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது. இது, சிறுகதைப் படைப்பிலக்கியத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இப்பாடத்தில் படைப்பிலக்கியமும் சிறுகதையும் எனும் தலைப்பில், அவை பற்றிய செய்திகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. படைப்பிலக்கியமும் சிறுகதையும் செய்யுளும், சிறுகதையும் படைப்பிலக்கியங்களாக விளங்கிய போதிலும், இவற்றை ஒன்றெனக் கூறிவிட முடியாது. இரண்டிற்குமிடையே வேறுபாடுகள் உண்டு. இவ் இரண்டும் வெவ்வேறு க...

கவிதை என்றால் என்ன..? ஒரு அலசல்.

ஆ ஊன்னா எல்லோரும் கவிதை எழுதுகின்றோம். சினிமா பார்க்கின்றோமா, காதல் செய்கின்றோமா, நண்பர்களுடன் ஊர் சுற்றுகின்றோமா, அரட்டை அடிக்கின்றோமா, சமூக இணையதளங்களில் உறுப்பினராக இருக்கின்றோமா.. அப்படியானால் நாங்களும் கவிஞர்கள்தான் என்றாகிவிட்டது இன்றைய நிலைமை. இருந்தாலும் கவிதை என்றால் என்ன.... அதன் வகைகள் என்ன... இவாறு எழுதுவது பற்றி சரியான முறையில் நாம் தெரிந்து வைத்திருப்பதும் நமது கடமையே. அந்த வகையில் இந்தப் பதிவு உங்களுக்கு கவிதை தொடர்பான ஐயப்பாட்டை நீக்கி, நீங்களும் தரமான நல்ல கவிதைகளை எழுதிட அருள்புரியட்டும் என வாழ்த்திக்கொள்கின்றேன். --------------------------------------------------------------------- கவிதை ‘இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால் இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது’ என்று கருதுமளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை. படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும். ...

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

Image
இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். இந்த நிலை தமிழுக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் மட்டுமே தமிழ் பழமையான செம்மொழி அன்று என்று கூறிவிட முடியாது. இங்குக் கர் என்பார் கூற்று நினைத்தற்கு உரியது. அவர் “வீரயுகத்தில் காப்பியம் மட்டுமே எழ வேண்டும் என்ற நியதி இல்லை. பல மொழிகளில் ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காவியங்களுக்குப் பதிலாக, கதை எதுவும் இன்றித் தங்கள் தங்கள் நாட்டுச் சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன” என்கிறார். சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்த...