Posts

Showing posts with the label அன்பு

அன்னை எனும் தெய்வம்...!

Image
அன்பின் திருநாளாம் அன்னையர்தின பெருநாளாம் அகமகிழ்ந்து கொண்டாட அவதரித்தத் ஒரு நாளாம்....! அகிலத்தில் நாம் இங்கு அவதரிக்கும் முன்னாலே அன்பெனும் கருவாலே அழகாக எமைத்தாங்கி மாதங்கள் பத்தாக முத்தாய் எமை பெற்றாளே...! உயிரினங்கள் அத்தனையும்.. ஓரிடத்தில் ஒன்றுசேரும் அன்னையெனும் தெய்வத்திற்கே அந்தப்பெயர் வந்துசேரும்...! தெய்வங்கள் கண்முன்னே தெரிவதில்லை - அவை அன்னையாய் இருப்பதை அறியவில்லை மாதாவே முதலென்று தெரிந்திருந்தும் உரிய மரியாதை சிலபேர் கொடுப்பதில்லை...! மதம் என்ற பெயரில் மதம்கொள்ளும் மனிதன் இனம் என்ற குணத்தில் சினம்கொள்ளும் மனிதன் இந்த ஒரு சொல்லில் மட்டும் புனிதனாய் பூப்பதும் ஏனோ...? உறவுகள் எத்தனை இருந்தாலும் உனை உள்ளங்கள் எத்தனை கவர்ந்தாலும் உண்மையில் அன்புகொண்டு உயிராக பாசம்கொள்ள அன்னையை போன்றிங்கு அவதிரித்தோர் யாரும் உண்டோ....? மனிதனாய் நீ பிறந்திருந்தால் நல்லமனம் கொண்டுநீ வாழ்ந்திருந்தால் அன்னையின் அன்பிற்கு அடிபணிந்து அவள்சொள்ளும் வாழ்விற்கு கீழ்படிந்து உன்தாயை நீ மதித்து வந்தால் உன்னாலும் உலகத்தை வெல்ல முடியும்...! எத்தனை தினங்கள் இருந்தாலும் அத்தனை தினங்கள...

அன்னையின் அன்பால் மட்டும்...!

Image
அன்னை பிசைந்த சோற்றை அள்ளித்த் தின்ற கைகள்.... அவசரமாய் வந்த "PIZZA" வை கிள்ளிப் பார்த்துவிட்டு கண்ணீரில் கைகழுவி போகின்றன.....!!! ++++++++++++++++++++ பிஞ்சுக் குழந்தையினை நெஞ்சில் வைத்து கொஞ்சும் போது நஞ்சுண்ட என் நாவும் அமுதத்தை சுவைக்கின்றதே...!!! அன்பில் மனம் நிறைகின்றதே...!!! அன்னையின் அன்பே நிரந்தரமானது... இதை அறியாதவன் மனது இயந்திரமானது...!!! ++++++++++++++++++++ "அளவிட முடியாத ஒன்றினால் அனைத்தும் அர்த்தப்படுகின்றது அன்னை உன் அன்பினால் மட்டும்" +++++++++++++++++++++ அன்னையின் அன்பும் அன்புக் குழந்தையின் சிரிப்பும் - என் அரக்க குணங்கள் அனைத்தையும் அழித்துச்செல்கின்றன...! அன்பால் மட்டுமே அகிலம் இங்கு செழித்தும் நிற்கின்றன...!!! +++++++++++++++++++++++ "அன்பின் நண்பர்களே பிடித்திருந்தால் மறக்காம ஓட்டுப்போடுங்க" நட்புடன், நா.நிரோஷ்.