Posts

Showing posts with the label கண்ணீர்

மாலை நேரத்து மயக்கம்...!

Image
தண்ணீருக்குள் கல்லாய் இருந்த என் மனது கண்ணீரால் கரைந்து கிடக்கின்றது அன்பே உன் காதல் வேண்டி....!!! ஆனால், உன்மனமோ கல்லாய் இருக்கிறதே காசு வேண்டி....!!! என் மனதை ஏன் கரைத்தாய்...? காதல் விதை ஏன் விதைத்தாய்...? கண் முன்னே நீயிருந்தும் நீரிருந்தும் எல்லாம் கானல் நீராய் தோன்றுதடா.... காதல் காலநிலை போன்றதடா...??? "நட்பின் ஓட்டுக்களை கொடுங்க... என் அன்பின் ஓட்டுக்களை எடுங்க" அன்பின் நண்பன், நா.நிரோஷ்.

எல்லாம் மாறிப்போயின....!!!

Image
உன் கண்கள் காணாத என் கண்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை எனக்கு....! உன் திசையறியாத என் கால்கள் முடமாகி முடங்கிக் கிடக்கின்றன....! உன் பெயரில்லா என் கவிதைகள் பொருள்தேடி புலம்பி அலைகின்றன...! வாடிய பூக்களில் வசந்தம் கண்ட கைகள் மலரும் பூக்களை மரணிக்கச்செய்கின்றன...! எல்லாம் மாறிப்போயின எனக்கு என்னவள் எனைவிட்டுப் பிரிந்து போனதால்...! ஆனால் இன்னும் இதயம் அவள் பெயர் சொல்லியே இயங்கிக்கொண்டிருக்கின்றது....!!! "நீங்கள் போடுக்கின்ற ஓட்டுகளில் பூப்பதர்க்காய் காத்திருக்கிறது எனது அடுத்த கவிதை" அன்புடன், நா.நிரோஷ்.

உன் நிழலே தஞ்சம்....!

Image
தொலைந்த இடத்திலேயே தொலையச்சொல்லி தொல்லை தருகின்றது - என் காதல் நெஞ்சம்....!!! +++++++++++++++++++++ கருணை பாராமல் காலால் மிதித்து கொன்றுவிடுகிறது உனது கல்நெஞ்சம்...!!! +++++++++++++++++++++ சொன்னாலும் கேட்காமல் கொன்றாலும் தோற்காமல் அடம்பிடிக்கின்ற இதயத்திற்கு என்றும் உன்நிழலே தஞ்சம்...!!! நா.நிரோஷ்.