Posts

Showing posts from September, 2011

சுடச்சுட சுட்ட பாடல்...! (Money Money Money... Ummah..!)

Image
சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! பணத்திற்காய் இட்ட பாடல் படத்தினில் இல்லாத பாடல் கேட்காத ஊரும் இல்ல பாடாத வாயும் இல்ல...! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! பசிவந்தா பத்தும் பறக்கும் பணம்வந்தா பசியும் பறக்கும் கசிந்திடும் காதல் கூட காசு இல்லைன்னா காலியாகும் போலியான உறவுகூட வேலியாக மாறி நிற்கும்...!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! சாந்தம்கொண்ட சாமியாரும் காசுகண்டால் வாய்பிளக்கும் கல்லானா கடவுள்கூட காசுக்காக கல்லுடைக்கும் கற்புகள் கூட இங்கு காசுக்காய் விலை பறக்கும்...!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! காசுக்காய் கல்யாணம் பணத்திற்காய் படுக்கையறை பிணம்கூட பணமென்றால் நடந்திங்கு வந்திடுமே பிணந்தின்னும் கழுகுபோல மனித மனந்தின்னும் காசு இங்கே....!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்...! மகத்தான மனிதமனம் பணத்தாலே மிருககுணம் குணத்தாலே உய்த்த இனம் பணத்தாலே அழியுது தினம் பண்டமாற்று சாதனம் உலகை படைப்பதுதான் வேதனை...!!! சுடச்சுட சுட்ட பாடல் சுகம்தரும் நல்ல பாடல்....!! ! நண்பர்களே பாடல் பிடித்திருந்தா கருத்தும் வாக்கும் இலவசமா ப

வாழ்வின் அழகிய தருணங்கள் அனுபவிப்போம் வாங்க..!

Image
வணக்கம் வணக்கம் வணக்கம்...! என்ன நண்பர்களே இவ்வளவு சோர்ந்து போய் இருகிங்க...? என்னுடைய பதிவுகளை படித்து வந்துமா உங்களுக்கு இந்த நிலமை... (டேய் கடுப்பேத்தாம விளக்கத்த சொல்லுடா). என்ன வாழ்க்கைடா இது அப்படி சொல்ல தோணுதா? பேசமா சாகணும் போல இருக்கு அப்படின்னு தோணுதா...? அப்படின்னா கண்டிப்பா இந்த பதிவ படிங்க. என்னதான் நாம் கடும் பிசியாக இயங்கிக்கொண்டிருந்தாலும் இடைஇடையே நமக்கு சற்று ஆறுதல் தேவைப்படுகிறது. அந்த நேரமாவது நாம் நம் வாழ்வின் அழகிய தருணங்களை உணர்ந்து கொள்ளலாமே. அது ஒன்றும் பெரிய விடயம் இல்லைங்க. ரொம்ப இலகுவானது இயல்பானது. எத்தனையோ பேர் எனக்கு நிம்மதி இல்ல நிம்மதி இல்ல என்று சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் நிச்சயம் அவர்களால் வாழ்க்கையை அனுபவிக்கக் முடியும் அதற்காக அவர்கள் எந்தவிதமான போதனையோ, தியானமோ, கடவுளை நாடியோ செல்லவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய நடைமுறை வாழ்க்கையை நாம் அழகாக மாற்றுதல் மூலம் அனைத்துவிதமான வாழ்வின் அழகிய தருணங்களை நான் உணர்ந்துகொள்ள முடியும். அதற்க்கு நான் தரும் இந்த தருணங்களை பாருங்கள், ஒருவேளை இதைப் படித்தவுடன் என்னடா இது சின்னபுள்ள தனமாக இருக்கு என தோன்றலாம். ஆன

சிச்சுவேஷன் சாங்க் (Situation Song) விற்பனைக்கு உண்டு..!

Image
நம்முடைய பதிவால் நாலுபேர் வாழ்க்கை சந்தோசமா அமைகிறது என்றால் அது எல்லோருக்கும் பெருமையான விடயம்தானே. அந்த வகையில் இன்றைய பதிவும் இந்த பதிவை படிப்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் வெற்றியடைய ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் என்பதில் மேலும் சந்தோசம். நாம் நல்லா உழைத்தும் நாலுபேருக்கு நல்ல உதவிகள் செய்தும் வாழ்கையில் முன்னுக்கு வராமல் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..? நமக்கு பின்னணியில் ஒரு "சிச்சுவேஷன் சாங்க்" அதாவது சூழ்நிலை பாடல் ஒன்று இல்லாமல் இருத்தலே. இந்த சிச்சுவேஷன் சாங்க் சரியாக அமைந்து விட்டால் நமக்கு ஒரு ஐந்து நிமிடம் போதும் நண்பர்களே வாழ்வில் உச்ச நிலைக்கு வந்துவிட. எனவே இந்த சிச்சுவேஷன் சாங்க் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் அந்த பொக்கிஷ பாடல் இங்கு நம்மிடம் கிடைக்கிறது. அது உங்களுக்கு வேண்டுமா அப்படியானால், அதற்கான தகுதி முதலில் நம்மிடம் இருக்கவேண்டும். அது என்ன என்ன தகுதி என்று பார்ப்பதற்கு முன்பு மூன்று பிரபலமான சிச்சுவேஷன் ஷாங்க் பார்த்துவிட்டு வருவோம். என்ன நண்பர்களே பார்த்திங்களா எப்படி இருந்த அந்த மூன்று மனிதர்களும் அந்த பாடல்களின் ப

கிளிகள் உன் விழிகள் மொழிகள்...!

Image
கி ளிகள் உன் விழிகள் பேசுகின்ற அழகினை சிறப்பித்துக்கூற என்குதேடியும் கிடைக்கவில்லையே... என் கவிதைக்கான மொழிகள்...!!! ********************************* எ ன்னைப்போல என் வீட்டு ரோஜாவும் ஏமாற துடிக்கின்றது... அவள் கூந்தல் போலி என்று அறியாமல்...!!! ********************************* க ல்நெஞ்சம் கொண்ட உன் காதலுக்கு நான் காத்திருப்பதனால்... இப்போதே கல்லும் மலரும் காத்திருக்கின்றன என் கல்லறைக்காய்..!!! ********************************* நட்புடன், நா.நிரோஷ்.

ஒரு உண்மையான உணர்ச்சிமிக்க காதல் கடிதம்.

Image
இளகிய மனம் படைத்தோர் பதிவை படிப்பதற்கு தவிர்க்கவும். ---------------------------------------------- அன்புள்ள முன்னாள் காதலிக்கு... , உன்னை நித்தம் நினைத்து முற்றத்து விளக்குமாறாய் தேய்ந்துபோன உனது முன்னாள் காதலன் எழுதிக்கொள்வது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் உனை சந்தித்தேன். இது உனக்கு நினைவில் இருக்காது அப்படி இருந்திருந்தால் அதற்க்கு ஏதாவது வேறு காரணம் உன் சார்பில் நீ வைத்திருப்பாய். உனை முதன் முதலில் கண்டவுடனேயே காதல் பிறந்துவிட்டது கூடவே கருமாதியும் முடிவாகிவிட்டது. அன்று எனக்கு ஒன்றும் புரியவில்லை அத்தனையும் அழகான நிமிடமாகவே கழித்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் என் காதல் சொல்ல நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா.... ? ஒருமுறை நீ நடந்து செல்லும்போது உன் சொடுகு நிறைந்த தலையில் இருந்து விழுந்த பேன் ஒன்றை கண்டெடுத்து அதை உன்னிடம் திருப்பி தரும்போது நீ என்னைப்பார்த்து "க்கியூட் போய்" என்று சொன்னபோது நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை தெரியுமா... ? ஆனால் அதற்கான அர்த்தம் எனக்கு இன்னும் தெரியாது தெரியுமா. இதற்காகவே எனது நண்பர்களுக்கு ஒரு மாதம் தொடர்ந்து பா

ஒரு பிரபல பதிவாளர் பற்றிய "ம்... ஆ.." பதிவு - உண்மை சம்பவம்

Image
பதறி அடித்து பதிவை காண ஓடி வந்திருக்கும் உள்ளங்களுக்கு பணிவான வணக்கங்கள். படிப்பதற்கு முன்னர் கொஞ்சம் தண்ணீர் குடிங்க பிறகு நல்ல ரிலாக்ஸ் பண்ணுங்க. ஓகே இப்போ பதிவ படிப்பதற்கு தொடங்குங்க....! முதல்ல நான் ஒன்றை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும், பதிவை படித்த பின்பு நீங்கள் எடுக்கப்போகும் எந்த முடிவுக்கும் நானோ எனது பதிவோ காரணம் அல்ல என்பதை முதலில் இங்கு தெரிவித்து தப்பித்துக்கொள்கின்றேன். (அப்பாடா ஸ்கேப்). ஒரு மனிதன் எப்படிபட்ட புகழின் உச்சத்தில் இருந்தாலும், தன்னை நியாயமான ஒரு மனிதனாக காட்டிக்கொண்டாலும் அனைத்தையும் மீறி ஒரு சில நடைமுறை மனித விளுமியத்தில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில்தான் இந்த பதிவு மேட்டரும். தான் வலையுலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு பதிவர் எப்படி இப்படி சிக்கிக்கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இதனால் இனி வலையுலகில் பல மாறுதல்களும், மறியல்களும் நிச்சயம் இடம்பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. முதலில் நடந்தது என்ன என்பதை பார்த்துவிட்டு இறுதியில் அவரின் பெயரை குறிப்பிடுகின்றேன். "ஹலோ.. ஹலோ.. ப்ளீஸ் வெயிட்" "அதுதான் சொல்க

மண்ணோடு மண்ணாகும் மழலைகள்...!

Image
உண்மைதான் உலகம் உண்மையிலே சுருங்கிவிட்டது... கருவறையில் இருந்து நேராக கல்லறையை சென்றடைகின்றோம்...! உண்மைதான், ஆறிலும் சாவு நூறிலும் சாவு அதற்காக இப்படியா உறுதிப்படுத்த வேண்டும்... ? மண்ணை அள்ளி உண்ணுகின்ற மழலைகளை.... மண்ணோடு மண்ணாக்குக்கின்றன சில மாமாதைகள்...!!! +++++++++++++++++++ நட்புடன், நா.நிரோஷ்.

பௌத்த மதமும்... இலங்கை அரசியலும்..!

Image
நான் அண்மையில் படித்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன், இதில் பௌத்த மதம் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள எல்லாம் இருக்கின்றது. அதைவிட ஒரு பௌத்த சமயத்தை பின்பற்றுகின்ற இலங்கை அரசியல்வாதிகளின் செயல்களும் உங்கள் சிந்தைக்கு வராமல் இல்லை. எனவே இந்த கட்டுரையை படித்துவிட்டு நீங்களே முடிவெடுங்கள். அவர்கள் எல்லோரும் உண்மையில் பௌத்தர்கள்தானா இல்லையா என்பதை. பௌத்த சமயம் என்று எதை அழைக்கிறோம்? அரச வம்சத்தைச் சார்ந்த சித்தார்த்தர் என்பவர் தவத்தினை ஆற்றி ஞானம் பெற்று, புத்தர் என்று வழங்கப்பட்டார். புத்தர் மக்களுக்கு அறிவுறுத்திய அறவுரைகள் பௌத்த நெறியாயிற்று. அந்நெறியைப் பின்பற்றியோர் பௌத்தர் எனப்பட்டனர். அவர்தம் சமயம் பௌத்த சமயம் என வழங்கப்படலாயிற்று. பௌத்த சமயம் வடக்கே தோன்றி வளர்ந்ததாயினும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் பரவி, சிறப்புப் பெற்றது. இந்தியாவில் மட்டுமன்றி இந்தியாவிற்கு வெளியிலும் பரவிய பெருமையை உடையது அது. 5.1.1 அசோகரின் பங்களிப்பு பௌத்த சமயம் பல்வேறு இடங்களில் வேரூன்ற முக்கியக் காரணமாக அமைந்தவர் அசோக மன்னர். வடக்கே தோன்றிய பௌத்த சமயம் இந்தியாவின் பல இடங்களிலும் பரவ

புத்த மொழி விழியாளே..!

Image
கொ ல்லாமை எனும் கொள்கை கொண்ட புத்தமொழி விழியாளே...! எனை நித்தம் கொன்று குவிப்பதேன்... ? கூரிய உன் விழியாலே... ??? அரபிமொழி போல அறியாமல் முழிக்கின்றேன்... அமுதமொழி தமிழ்மொழியாய் அரவணைக்க வருவாயா... ? இல்லை , ஆப்பு தந்தே செல்வாயா.... ??? நட்புடன், நா.நிரோஷ்.

ஏன் உலையாய் கொதிக்கிறாய்..?

Image
ஏ ன்.....! உலையாய் கொதிக்கிறாய்... ? உள்ளம சுடுகிறாய்... ? எல்லாம் தெரிந்தும் சிலையாய் நிற்கிறாய்...! என்னை இடிக்கிறாய்..!!! அருகில் வந்தால் அலையாய் அடிக்கிறாய் ...! எனை அடியோடு ஒழிக்கிறாய்...!!! பூக்கள் தருகிறேன் இலையை பறிக்கிறாய்...! எறும்பாய் வந்தால் ஏறி மிதிக்கிறாய...!!! இலவசம் என்கிறேன் விலையை கேட்கிறாய்...! விடுமுறை என்கிறேன் வேலை என்கிறாய்....! காதல் மதித்தும் காலால் மிதிக்கிறாய்...! கனவில் மட்டும் ஏன்... ? சுளையாய் சுவைக்கிறாய்...! சுகமாய் வதைக்கிறாய்...! காதல் விதைக்கிறாய்...!!! நட்புடன், நா.நிரோஷ்.

வக்கீல் வண்டு முருகனும் டோனியும்..!

Image
இடம்பெற்று முடிந்திருக்கும் இந்தியா இங்கிலாந்து தொடர் பற்றிய முழுமையான பதிவிற்கு முன்னர் ஒரு சின்ன முஸ்கி.....! அப்படியே உங்க கருத்துக்களையும் சொன்னீங்க என்னா நாளைக்கு நானும் பதிவு போட ரொம்ப ஈசியா இருக்கும்.....! நட்புடன், னா.நிரோஷ்.

உண்டியலில் ஓட்டை போட்டு - பல்சுவை கவிதைகள்

Image
*** *** *** *** *** *** *** என் குறை நிறைகள் எல்லாம் உங்கள் கருத்துக்களாக இங்கே பூக்கட்டும்....! அப்படியே வாக்களிக்க மறந்திடாதிங்க...!

காதலின் மகத்துவம்..! ஒரு மருத்துவம்..!

Image
* காதல்தான் நம் இதயத்தை சுறுசுறுப்பாக வைத்துள்ளது. ================= * காதலில்தான் ஆண்மாவின் உண்மையான அழகு உள்ளது. ================= * ஆண் பெண்ணின் முதல் காதலாகவும் , பெண் ஆணின இறுதி காதலாகவும் இருந்தால் என்றும் அழிவில்லை. ================= * ஆண்மா காதலர்களின் உதடுகளில் மட்டும்தான் இன்னொரு ஆண்மாவை சந்திக்கின்றது. ================= * காதல் என்பது கைத்தடி போன்றது , அது நாம் நடப்பதற்கு மட்டுமல்ல , நல்ல திருமணத்தின் நுட்பத்தையும் திறக்கின்றது. ================= * காதலில் மட்டும்தான் பொய்கள் அதிக அளவில் அழகுபெறுகின்றன. ================= * உண்மையான காதல் எது பொய் எது மெய் என ஆராய்ந்து பார்க்காது , அப்படி பார்த்தாலும் பெரிதாக அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாது. ================= * காதல் கொண்ட நெஞ்சம் ஒரு பட்டாம்பூச்சி போன்றது , அது எங்கு சென்றாலும் , எந்த நிலையில் இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தியே இருக்கும். ================= * காதலில் மட்டும்தான் காதலை காதலாக கற்றுக்கொள்ள முடியும். ================= காதலுக்கு கண்கள் இல்லை , காதல் குருடானது என்றால் கல்யாண