கரையல் சோறு - 06.09.2011

அனைவருக்கும் இனிய திங்கள் வணக்கங்கள். -----------------------------------------------------------------
பழிக்குப் பழி எனும் பழைய டயலாக் வைத்துக்கொண்டு பாரத நாட்டில் ஒரு பாவச்செயல்... இது பழிக்குப்பழியா இல்லை பலிக்கிடாவா என்றும் தெரியவில்லை புரியவில்லை... அதற்குள் ஏனோ இந்த அநியாய தண்டனை. ஆட்சி என் பக்கம் நான் சொல்கிறேன் தூக்கிலிடுங்கள் அவர்களை என்று அந்த கடவுளே (சாமியே) சொல்லும்போது நாம் என்னசெய்வது. எது எப்படியோ அந்த மூன்று உயிர்களுக்கும் இன்னும் 56 நாட்கள் கிடைத்திருக்கின்றன மூச்சுவிட. முடியுமானவரை முடிந்ததை செய்யுங்கள்.
---------------------------------------------------------------------------------
மற்ற நாடுகளெல்லாம் விண்ணில் தெரியும் மர்ம மனிதர்கள் பற்றி தெரிந்துகொள்வதற்காக என்னவெல்லாம் ஆராட்சி பன்னுகின்றார்கள்.... ஆனால் இங்கு நடுவீதிக்குள், நாடு வீட்டிற்குள் வந்துபோகும் இந்த மர்ம மனிதர்கள் பற்றி இன்னும் ஒரு முடிவும் கிட்டவில்லையேயப்பா என்னதான் நடக்குது இங்கே ஒண்ணுமே புரியலையே.....?
---------------------------------------------------------------------------
திருவிழாவில...