நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் கேட்கிறது..!



நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் வேண்டுமாம் கைநீட்டுகிறது ஜன்னல் வழியே அதுதான் காதலை கவிதையாய் பொரித்து கொண்டிருக்கிறேன்..!

****
அழகே உனை ஆராதிக்க நேரமில்லை முடியுமானால் இன்று என்கனவில் வந்துவிடு #வேலைக்குபோகிறேன்.

****
விடுதலை வேண்டி வேண்டுமென்றே தவம புரிகின்ற கண்களுக்கு மீண்டும் உனை காண்பேனென்று எப்படி சொல்வேன்...!

****
இனி குடிக்கமாட்டேன் என்பவனை நம்பலாம் ஆனால் இனி கிரிக்கெட் மேட்சு பாக்கமட்டேன் என்பனை நம்ப முடியாது.. #அவதானிப்பு + கடுப்பு.


****
உன் கால்செருப்பு என்கன்னத்தை முத்தமிட்டபோதுகூட கலங்கியதில்லை நான், இன்று உன் நாய்க்குட்டியின் ஆத்மாக்காய் ஒப்பாரிவைக்கிறேன் #நாய்க்காதல்

****
சிறு காய்ச்சல் வந்து சொல்லிவிட்டு போகிறது அன்னை அருகில் இல்லை என்ற பெரிய குறையை...!

****
எட்டமுடியா உச்சம் நீ... வானை வட்டமிடும் நிலவு நீ... எனை திட்டமிட்டு கொத்திச்செல்லும் காதல் கழுகும் நீ...!

****
காதல் காய்ச்சல் கசக்கிறது வாழ்க்கை உன்விழியால் கொஞ்சம் புளிப்பார்வை பாரேன்....!

****
பப்பரப்பே என நீ விரித்துப்போட்ட உன் கூந்தலுக்குள் சிக்கிச்சீரழிகிறது என் பார்வைகள்...!

****
யாருமில்லா டைம்லைனில் என் கீச்சுக்கள் மட்டும் கூச்சலிடுகின்றன சுதந்திரமாய்....!

****
உனை நினைத்தாவறே இறக்கவேண்டும் அப்போதுதான் எமனுக்கும் புரியும் காதல்வலி..!

****
காலங்களில் எனக்கு கஷ்டகாலம் இஷ்டமாய் காதல் வந்து என்னோடு ஒட்டிக்கொண்டதால்..!

****
எங்கேயோ நீ உறங்குகிறாய் உனக்காய் இங்கு தாலாட்டு பாடுகின்றன என் கவிதைகள்...!

****
வெயில்கால வெள்ளரிப்பழமாய் பிளந்துகிடக்கிறது மனது நீ வந்து தாகம் தணிப்பதர்க்காய்...!

****
நிலாப்பழம் உண்கிறேன் உன்நினைவுகளோடு நான் வேச்சுலர் என்பதனால் #ந.நி.கீ.

****
அமலா பால் விழியாள்... அமுத தமிழ் மொழியாள்... எனை கிழிகிழியென கிழித்தாள்...!

****
மனதோடு மல்லுக்கட்டும் மங்கை உன் நினைவுகளை கவிதை மதுகொடுத்து உறங்கவைக்கிறேன்..! :)
நோ காமன்ஸ்
****
கவிதை பிசைந்த கையால் நிலவை விரட்டுகிறேன் நீயிருக்கும் திசைவந்து கொட்டிவிடும் என்பதனால்..!!!

****
காதல் சட்டை கிழிந்து கிடக்கிறது அன்பே உன் விழி ஊசி வேண்டி மௌனமொழி ஊசி வேண்டி...!

****
நட்புடன்.. நா.நிரோஷ்

Comments

  1. நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் வேண்டுமாம் கைநீட்டுகிறது ஜன்னல் வழியே அதுதான் காதலை கவிதையாய் பொரித்து கொண்டிருக்கிறேன்..!
    /////////////////////////////////////
    அண்ணன் சரக்கு மாஸ்டரோ? (சமையல்காரரோ? அப்படின்னு கேட்டேனுங்க.....)

    ReplyDelete
  2. நன்றிகள் சுரேஷ்குமார்....:))

    ReplyDelete
  3. Nirosh! ஓரே சிரிப்பாயிருக்கப்பா வரிகள் முழுதும். நன்றாகவேயுள்ளது. காதலும் கிண்டலுமாய் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. நன்றிகள் அம்மா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...!

    ReplyDelete
  5. நிலாப்பழம், கவிதை மது, புளிப்பார்வை, வெயில்கால வெள்ளரிப்பழமாய் பிளந்துகிடக்கிற மனது.....
    இப்படியாய் அழகான வார்த்தைப்பிரயோகங்கள்.... எங்கிருந்து பிடிக்கிறீங்க இப்பிடி வார்த்தைகள....
    ///பப்பரப்பே என நீ விரித்துப்போட்ட உன் கூந்தலுக்குள் சிக்கிச்சீரழிகிறது என் பார்வைகள்...!/// ஹா... ஹா... கவிதை..... வாழ்த்துக்கள்..... தொடரட்டும்.....!!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.