Posts

Showing posts with the label நிலா

என் விழியும் தமிழ் மொழியும் விற்பனைக்கு...!

Image
எ ன் விழிகள் விற்பனைக்கு என் இதயத்தோடு தொடர்பில் இருந்து என்றும் உனைக்காண ஏங்கித்துடிக்கின்றது ஆதலால் என் விழிகள் விற்பனைக்கு...!!! ************************** எ ன் மொழிகள் விற்பனைக்கு நான் ஒரு கோழை என்னால் பேசப்படுவதால் என்றும் அடிமையாகவே உயிர்வாழ்கிறது அதற்கு நிரந்தர விடுதலை வேண்டும் வீரநெஞ்சம் கொண்டவர்களுக்காய் என் மொழிகள் விற்பனைக்கு...!!! ******************* எ ன் யன்னல் நிலவு விற்பனைக்கு தோழியாய் நினைத்து காதல் செய்திபேச காதலி யாருமில்லை காத்திருக்கும் நிலவும் தேய்ந்துபோவது நியாயமில்லை ஆதலால் என் யன்னல் நிலவு விற்பனைக்கு...!!! ************************ எ ன் ஆண்மை விற்பனைக்கு உயிர்தந்த உறவுக்கும் உயிர்கொடுக்கும் உறவுக்கும் உடன்பிறந்த உறவுக்கும் உடன்பிறவா உறவுக்கும் ஒன்றும் செய்திருக்கவில்லை ஆகவே என் ஆண்மை விற்பனைக்கு...!!! ************************ எ ன் முற்றத்து மல்லிகை விற்பனைக்கு முகர்ந்து பார்த்திடவும் மூச்சின்றி தவிக்கின்றேன் முன்பனியில் நனைந்தும் சுடும்வெயிலில் வாடியும் வ...

நிலா உங்களுக்கு எப்படி..? ஒரு சுவை விருந்து.

Image
ஐயோ..... இந்த நிலா படும் பாடு இருக்கே சொல்லமுடியாதுங்க அம்புட்டு அநியாயமும் இந்த அம்புலிக்கு நடக்குதுங்க. யார் யார்தான் இதற்க்கு சொந்தம் கொண்டாடுவது என்று ஒரு அளவே இல்லேங்க..! பிள்ளைக்கு சோறு ஊட்ட நிலா... ஆயாவிற்கு வடை சுட நிலா.. அண்ணனுக்கு சாயா போட நிலா... காதலுக்கு தூதுவனாய் நிலா... கவிஞனுக்கு கருப்பொருளாய் நிலா... மப்புக்கு ஊறுகாயாய் நிலா... மாப்புக்கு மருமகனாய் நிலா... விஞ்ஞானிக்கு ஆராய்ச்சியாய் நிலா... விவசாயிக்கு விளைச்சலாய் நிலா... பூசாரிக்கு பூஜைக்கு நிலா... பூமிக்கு இரவுநேர ஒளியாய் நிலா... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்க. என்னதான் மனிதன் வளர்ச்சி பெற்றாலும், நிலா என்பது ஒரு கிரகம் என்பது பற்றி தெரிந்திருந்தாலும், இன்றும் மனிதனின் உணர்வுகளோடு ஓட்டியிருந்து ரசிப்பதாக நிலா இருந்துகொண்டேதான் இருக்கின்றது. குழந்தைக்கு அம்மா சோறூட்ட நிலாவை காட்டுவதில் நியாம் இருக்குங்க. குழந்தை நிலா பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் இந்த காதலர்கள் நிலாவோட அடிக்குற கூத்து இருக்கே அம்மா தாங்கமுடியலைட சாமி (இங்க வேற என்னாவாம்). நேரில் சொல்ல பயந்துபோய் தோழியாய், தோழனாய் நினைத்து எல்லாவற்றையும...

என் யன்னல் நிலவே..!!!

Image
என் யன்னல் நிலவே.. என்னவள் கனவில் வருவாளென்று நேற்றிரவு நேரத்துடன் தூங்கிவிட்டேன்... சூரியனிடம் சொல்லி எனைச் சுட்டுவிடாதே...! ************************************************** என் முற்றத்து மல்லிகையே... அன்பானவளின் அழகிய புன்னகைகண்டு உனை நான் காணவில்லை நாளை மலராமல் நின்று எனை வாட்டிவிடாதே...! ************************************************** என் இரவுக் காற்றே... அவள் சுடிதார் பட்டு சிதறிய கற்று என் சுவாசக்காற்று ஆனதனால் எனைத்தழுவும் இன்பக்காற்று நீ எனை தவிக்கவிட்டுச் செல்லாதே...! ************************************************** கூவுகின்ற குயிலே... என் மயிலின் குரல் வயலின் போன்றதுதான் அதற்காய் உன் தாலாட்டின்றி எனை தூங்கச்சொல்லாதே...! ************************************************** பக்கத்துவீட்டு சுட்டியே... அழகுப்பெண்மை அவளை நான் பார்கபோகும் அவசரத்தில் அழகுபொம்மை உனைநான் பார்க்கத் தவறிவிட்டேன் உன் பிஞ்சுமுத்தம் இல்லையென்று எனை கொன்றுவிடாதே...! ************************************************** என் குட்டிச்சுவரே... பாவை போகும் இடம்தேடி பாதம் நாட ச...

நான் நனைந்த மழை...!

Image
கார்மேகம் கழற்றி எறிந்துகொண்டிருந்தன தன் உடைகளை மண்ணில் மழையாய்...! குடையின்றி ஒதுங்கியதால் உடையும் நனைந்துவிட்டன இலையாய்...! நள்ளிரவு என்பதால் அக்கம்பக்கம் யாருமில்லை ஒரு அநாதை நாயைத்தவிர...!!! மனதோடு ஒரு மாற்றம் நடுங்கிய விரல்நடுவே சிகரெட் உட்கார அடம்பிடித்தது...! மூட்டிய தீயில் மூச்சும் இனித்தது...!!! பசித்த மண் மழைச்சோறு உண்ட களைப்பில் மண்வாசனை தந்துகொண்டிருந்தது...! மிஞ்சிய மழையை தேங்கியநீராய் சேமித்து வைத்து சேறு தயாரித்தது...!!! குருத்தோலை தொட்டமழை தென்னம் கருவோடு கொஞ்சிக்குலாவி பழுத்தோலை வழியாக - என் தோள்வந்து தொட்டபோது பிஞ்சிக் கரமொன்று எனையுரசும் சுகம்கண்டேன்...!!! அமாவாசை இரவு அலங்கரிக்கப்பட்ட நிலவு எனை எட்டிப்பார்த்து ஏதோ சொல்ல முயல்கிறது மின்னல் வந்து செல்கிறது நிலா மறைகின்றது.. நிறுத்தப்பட்டது மழை விலக்கப்பட்டது திரை மீண்டும் நிலா உலா..!!! சிறிது நேர ஒய்வு சில ஒலிகள் ஆரம்பம்..! இடிமுழக்கம் தவளைப்பாட்டு கச்சேரி ஆரம்பம்...!!! மழை போழியுதென்று இழுத்திப்போர்த்திப் படுத்துகொண்டால் இயற்கைதரும் சுகத்தையெல்லாம் இழ...

காதல் குருடன்....!

Image
வெளிச்சம் நிறைந்த பகலில் வெண்ணிலா எப்படி வரும்...? நான் மூடனா...? இல்லை குருடன்...! காதல் குருடன்...! அதனால்தான் என் காதல் வெண்ணிலவை பகலிலும் தேடுகின்றேன்...!!! ++++++++++++++++++++++++++ உன்னோடு நானிருந்த கணங்கலேல்லாம்... பிணங்களாய் ஆனபின்பு, உன்கரம் பற்றித்திரிந்த என் கைகள், கிறுக்குப் பிடித்தபடி ஏதோ கிறுக்கி அலைகின்றது....! என் தனிமையின் தவிப்புகளை கவிதையாய் மாற்றியபடி....!!! "உங்கள் நட்பின் ஓட்டுக்களால் என் கவிதைகள் மேலும் பூக்கட்டும்" நட்புடன், நா.நிரோஷ்.

நான் ரசித்த அந்திமாலை.....!

Image
நான் ரசித்த அந்திமாலை....! வெள்ளை நிலவை வேலைக்கு அமர்த்திவிட்டு வீடுசெல்லும் மஞ்சள் சூரியன்...! மாலைநேர குளிர்காற்றில் மயங்கியபடி ஒன்றை ஒன்று முத்தமிட முனைகின்ற தென்னோலைகள்...! உதிர்ந்து விழுகின்ற நொச்சிலைகள்...! முதிர்ந்து விழுகின்ற வேப்பிலைகள்....! வீடு திரும்பும் விவசாயி காடுதிரும்பும் பறவைகள்...! கூடுதேடும் கோழிகள் கூடவே நடக்கும் ஆடுகள்...! அலையில் நீல பூக்கள்சூடி அசைந்துவரும் ஆற்றுவாழைகள்...! அதனடியில் படுத்துறங்கும் மீன்கள்...! அதைபிடிக்க பதுங்கி நிற்கும் மீனவர்கள்...! கோயில்மணி ஓசையுடன் குருகுல குழந்தைகளின் தேவாரசத்தம்....! கொக்கு நாரை தவளைகளின் குதூகல சத்தம்....! குளக்கரையில் கச்சைகட்டி குளிக்கபோகும் ஆண்கள்...! குடத்தை இடுப்பில் வைத்து நடந்துபோகும் பெண்கள்...! குழந்தைக்கு சோறூட்டும் அம்மா பசுவிற்கு புல்லூட்டும் அப்பா...! பேரனுக்கு கதை சொல்லும் பாட்டி பிரம்பில் கூடைநெய்யும் தாத்தா...! அரசியல்பேசும் சண்முகம் அதைமறுக்கும் சுந்தரம்...! தேநீர்கடையில் பெரும்கூட்டம் பின்புறத்தில் புகைமூட்டம்...! பெட்டிக்கடை முன்னாட...