என் விழியும் தமிழ் மொழியும் விற்பனைக்கு...!



ன் விழிகள் விற்பனைக்கு

என் இதயத்தோடு

தொடர்பில் இருந்து

என்றும் உனைக்காண

ஏங்கித்துடிக்கின்றது

ஆதலால் என் விழிகள்

விற்பனைக்கு...!!!

**************************

ன் மொழிகள் விற்பனைக்கு

நான் ஒரு கோழை

என்னால் பேசப்படுவதால்

என்றும் அடிமையாகவே உயிர்வாழ்கிறது

அதற்கு நிரந்தர விடுதலை வேண்டும்

வீரநெஞ்சம் கொண்டவர்களுக்காய்

என் மொழிகள் விற்பனைக்கு...!!!

*******************

ன் யன்னல் நிலவு விற்பனைக்கு

தோழியாய் நினைத்து

காதல் செய்திபேச

காதலி யாருமில்லை

காத்திருக்கும் நிலவும்

தேய்ந்துபோவது நியாயமில்லை

ஆதலால் என் யன்னல் நிலவு

விற்பனைக்கு...!!!

************************

ன் ஆண்மை விற்பனைக்கு

உயிர்தந்த உறவுக்கும்

உயிர்கொடுக்கும் உறவுக்கும்

உடன்பிறந்த உறவுக்கும்

உடன்பிறவா உறவுக்கும்

ஒன்றும் செய்திருக்கவில்லை

ஆகவே என் ஆண்மை விற்பனைக்கு...!!!

************************

ன் முற்றத்து மல்லிகை விற்பனைக்கு

முகர்ந்து பார்த்திடவும்

மூச்சின்றி தவிக்கின்றேன்

முன்பனியில் நனைந்தும்

சுடும்வெயிலில் வாடியும்

வாசமற்றுப் போகும்முன்

என் முற்றத்து மல்லிகை

விற்பனைக்கு...!!!

**************************

ன் கற்பனைகள் விற்பனைக்கு

தாய்மொழி என்றும்

தமிழ்மொழி பயின்றும்

வாய்மொழி இருந்தும்

ஒருவரி கவி எழுதிட நேரமில்லை

ஆதலால் என் கற்பனைகள்

விற்பனைக்கு...!!!

************************


ஏதும் குற்றம் குறை இருந்தால் கருத்துக்ளில் சொல்லிவிடுங்கள் அப்படியே உங்கள் வாக்கையும் இன்ன்டுச்செல்லுங்கள்.

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

  1. ஆதங்கம் தவழ்ந்தோடும்
    அழகிய கவிதை!

    ReplyDelete
  2. ஆறும் விலை மதிப்பற்றவை!விற்பதெப்படி?

    ReplyDelete
  3. நன்றிகள் அனைவருக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும்..!

    ReplyDelete
  4. நல்லதொரு ஏக்கமான கவிதை

    ReplyDelete
  5. அருமை அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.