பல்லு இருக்கிறவங்க எல்லோரும் பவர்ஸ்டார் ஆக முடியாது..!


பல்லு இல்லாதவங்க எல்லாம் பக்கோடா சாப்பிட முடியாது... பல்லு இருக்கிறவங்க எல்லாம் பவர்ஸ்டார் ஆக முடியாது..!

கண்ணீர் துடைக்கும் கைகளுக்கு தங்கஆபரணங்கள் தேவையில்லை, அவை என்றும் மதிக்கப்பட வேண்டியவைதான்...!

****

பூங்காற்று திரும்புமா பாடல் கேட்கிறேன் பாலைவனப் புளுதிக்காற்றில் நின்றபடி...!

****

மொக்கைகள் முட்டிமோதும் டுவிட்டரில் எட்டியிருந்து புதினம் பார்கிறேன் என்றாவது நானும் வித்தை காட்டலாம் என்றபடி....!

****

டுவிட்ஸ் பூக்கள் பூக்கும் டுவிட்டர் தோட்டத்தில் அலுவலக ஆணிகள் ஆடுகளாய் அனைத்தையும் நாசப்படுத்துகின்றன.....:(

****

முணுமுணுத்த நாய்க்கு முத்த பிஸ்கட் கொடுத்துவிட்டு ஓட்டின்மீது ஏறி ஒழுகிய மழையாய் உள்நுழைந்தேன் - களவானி

****

கண்ணுக்குள் நூறு நிலவு வேண்டாம் ஒரு நிலவுக்கே இழவு போகுதே...:(

****

ஏதேனும் நுளம்பு வந்து உன் தூக்கம் கலைக்கிறதா.. அது என் கவிதை படித்துவிட்டு வந்திருக்கிறது போலும்...!

****

தூக்கமாத்திரை போட்டும் துயில முடியவில்லை உன் துப்பட்டாவில் சிக்கித்தவிக்கும் என் நினைவுகளால்..!

****

நிலவு வந்து கேட்டால் நான் இல்லையென்று சொல்லுங்கள்.... ஒரே தொல்லையப்பா கவிதைகேட்டு....!


ஆணிகள் அவதரிக்கும் பகல் பொழுதுகளில் அன்பே உன்னினைவே சுத்தியல்....!

வண்டுகள் வந்து வரிசையில் நிற்கின்றது ஒரு புன்னகை சிதறிவிடு பிழைத்துப்போகட்டும் அவைகள்...!

****

இருள் சூழ்ந்த நேரம் கவிதை நிலவுகள் தயார்செய்கிறேன் கண்ணே உன் அருள் வேண்டி....!

****

பஞ்சாயத்தில் பஞ்சு பஞ்சாய் பறக்கிறது நம் காதல், அஞ்சுதமே அடியேன் உன்பின்னால் வந்ததால..!

****

காந்த மைகொண்டு கவிதை எழுதுகின்றேன் உன் இரும்பு மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ள..!

அழியும் நிலையில் அவதாரங்கள் கடவுள்கள் என்ற ஆதாரங்கள்..:(

****

மலர்கள் தூவிய சாலைகள் எங்கும் மனதில் காதலுடன் நடப்பதால்....!

****

நீ திரும்பி பார்த்து சிரிக்கும் ஒவ்வொரு தடவையும் வேண்டும் என்றும் மனம்

****

தத்தி தாவிச்செல்லும் தாவணிப் பூவே.. ஆணிகள் இன்றி அலுப்பெடுத்த கைகள் உன்னைப்பற்றி கவிதை கிறுக்குதே...!

****

காண கண்கள் இல்லாமல் ஏங்கித்தவிக்கும் என் கவிதைகளுக்கு எப்படி சொல்வேன் இந்நேரம் நீ குறட்டை விட்டு தூங்குவாய் என்று..!

****

கண்ணீர் நெருப்பில் எத்தனை முறை கழுவினாலும் காதல் தங்கம் திரும்ப திரும்ப மின்னுகிறது..!

****

நட்புடன் நா.நிரோஷ்

Comments

  1. எப்படி இப்படில்லாம்?தாராளமாய் ரசிக்க சிரிக்க தகுந்த மொக்கைகள்.ஒரே பதிவில் ஓவர் லோடு கொடுக்கிறிங்க.தனி தனி தலைப்பில் இடலாமே...

    ReplyDelete
  2. துணுக்குகள் அனைத்தும் அருமை. உண்மையில் பவர்ஸ்டார் விஜய் டிவிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. //எப்படி இப்படில்லாம்?தாராளமாய் ரசிக்க சிரிக்க தகுந்த மொக்கைகள்.ஒரே பதிவில் ஓவர் லோடு கொடுக்கிறிங்க.தனி தனி தலைப்பில் இடலாமே...//

    அப்படியே ஆகட்டும் சதீஷ்... நன்றிகள் வருகைக்கும் கருத்துக்கும்....!

    ReplyDelete
  4. நன்றிகள் பாலா... வருகைக்கு...:))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.