அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் அமுதா எனும் அன்னை மடியில் அவதரித்த அமுதசுரபி துஷயந்தா நீ அனைவரையும் விட்டு போனதெங்கே சொல் நண்பா...? கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க இலக்கியம் தடுமாற இலக்கணம் தமிழ்மாற எப்படி கவிதைகள் எழுதமுடியும்...? உன்புகழ் எப்படி பாடமுடியும்...? நோயோடு வந்திருந்தால் நொந்திடோமே காலன் சாவெடுத்து போனானே நண்பா சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயது சாந்தியாய் போனது ஏன் நண்பா...? அன்று முதல் இன்று வரை - என்றும் உன்முகம் வாடியதில்லை உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும் துன்முகத்தை நாடியதில்லை - இன்று மூடிவைத்து உன்முகத்தை நாங்கள் கூடிவந்து கொண்டு செல்லும் கொடிய நிலை ஏன் நண்பா...? அன்னைக்கு ஒரேபிள்ளை அனைவருக்கும் செல்லப்பிள்ளை உனை விரும்பாதோர் யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை கொடிய நோய்கொண்டு நீபோக குறையுண்டோ நாங்கள் சொல்ல - இனி நீயின்றி எங்கள் அணி எப்படி வெல்லும்...? அணியில் நீ அனைத்திலும் சிறந்தவன் ஆடுகளத்தில் நீ அதிரடி ஆட்டக்காரன் இடது கைகொண்டு எதிரணியை பந்தாடும் ஆட்டநாயகன் - ஓட்டங்கள் நீ குவித்து கிண்ணங்கள் பெற்ற வேட்டைநாயகன் விதியெனும் விளையாட்டில் விடையேதும் சொல்லாமல் ...
இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். இந்த நிலை தமிழுக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் மட்டுமே தமிழ் பழமையான செம்மொழி அன்று என்று கூறிவிட முடியாது. இங்குக் கர் என்பார் கூற்று நினைத்தற்கு உரியது. அவர் “வீரயுகத்தில் காப்பியம் மட்டுமே எழ வேண்டும் என்ற நியதி இல்லை. பல மொழிகளில் ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காவியங்களுக்குப் பதிலாக, கதை எதுவும் இன்றித் தங்கள் தங்கள் நாட்டுச் சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன” என்கிறார். சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்த...
கவிதை சொல்லும் கண்களே என் கவிதைக்கு கருவாகின்றன...! தமிழ் சொல்லும் கவிதை தாய்மொழி சொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன உன் விழி சொல்லும் கவிதையில்...!!! ஐயோ....!!! இனி நீ தூங்கும் வேளையில் துவண்டுவிடுமே என் கவிதையும்...! விழித்திரு... கவிதை கொடுத்திரு... காலமுள்ளவரை உன் விழிசொல்லும் கவிதையை திருடியபடி என் மொழிசொல்லும் கவிதையும்...!!! நட்புடன், நா.நிரோஷ்.
கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. மிகப்பொருத்தமான படங்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்
அனைத்து வரிகளும் அருமை நண்பரே..
ReplyDeleteநட்புடன்
சம்பத்குமார்
கவிதைச்சிதறல்கள் அனைத்தும் அருமை!
ReplyDelete