மழைதுளியிலும் கண்காணிப்பு கேமரா..!!!

இலங்கையில இனப்பிரச்சனை இந்தியாவில சாதிப்பிரச்சினை இருநாட்டு அரசியல்வாதிகளின் ஆயுளின் நகர்விற்காய்...!

✿✿✿✿✿✿✿✿

காலைநேர கனவுகளில் மட்டுமே பாலைவனங்கள் எங்களுக்கு சோலைவனங்கள்...! அதையும் குலைத்துவிடுகிறது சிலபேரின் குறும்செய்திகள்...!

✿✿✿✿✿✿✿✿

ஒவ்வொரு மழைதுளியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் எப்படி இருக்கும்...? ஹீ ஹீ #குறுக்குப்புத்தி.

✿✿✿✿✿✿✿✿

ஒருவேளை காதல் சுற்றுப்போட்டிகள் நடந்தால் அனைவரின் தலைக்கும் மாறிமாறி வரலாம் ஆரஞ்சு, பேர்பில் தொப்பிகள்..!

✿✿✿✿✿✿✿✿

ஏசிக்கும் எயாருக்கும் நடக்கும் யுத்தத்தில் குளிர்காய்கிறான் மனிதன்...!

✿✿✿✿✿✿✿✿

கடினபந்தை அடிப்பதற்கு டைமிங் நல்லா இருக்கணும் காலத்தை வெல்வதற்கு டைம் நல்லா இருக்கணும்...!

✿✿✿✿✿✿✿✿

நீ கிள்ளிச்சென்ற மல்லி மணம்வீசுதே உன்பெயார் சொல்லி...!

✿✿✿✿✿✿✿✿

எருமையின் மீதிலே எமன்வரும் நேரம் என்ன நேரம்..? யாராச்சும் தெரிந்தவர்கள் உண்டோ அறிந்தவர்கள் உண்டோ..?

✿✿✿✿✿✿✿✿

Who to follow இல் பில் கேட்ஸ் இருக்கிறார் ஃபாலோ பண்ண பயமா இருக்கிறது தெருவோர டீக் கடைக்காரனுக்கு தெரிந்தால் அசிங்கமா போய்விடும்..:)

✿✿✿✿✿✿✿✿

எழுபேர் ஒரேமாதிரி இருப்பாங்களோ இல்லையோ.. ஆனால் கண்டிப்பா ஸ்ரீகாந்த்தேவா மாதிரி ஒருத்தர் இருந்திருப்பார் ஏனென்றால் அவர் தேவா மகன். #COPY

✿✿✿✿✿✿✿✿

சிந்தனை செய்யாத மனமே உனை சிந்திக்கின்றது இதை அறியா என்மனம் முந்திக்கொள்கிறது..!

✿✿✿✿✿✿✿✿

உன்னைச்சுற்றி என்காதல் உளவுத்துறை டி.ஐ.ஜி யாய் பணிபுரிகிறது... நீயும் எனை காதல்செய்கிறாய் என்பதை புரியவைக்க...!

✿✿✿✿✿✿✿✿

யுகத்தில் ஒரு உண்மை பல பொய்களை பெற்று எடுக்கின்றது

✿✿✿✿✿✿✿✿

உன் கலைந்த கூந்தலுக்குள் நுழைந்த காற்று கர்ப்பம் தரித்து வெளியேறுகின்றது வாசனைக் குழைந்தைகள் சுமந்தபடி...!

✿✿✿✿✿✿✿✿

கவிதை எழுத உன்நினைவும் நிலவும் போதுமானது..!

✿✿✿✿✿✿✿✿

என்னதான் உன் மௌனம் என் உள்ளத்தை உலுக்கி குலுக்கி உளியாய் செதுக்கி வைத்தாலும் அங்கே உன்னுருவம் மட்டுமே என்றும் நிரந்தரம்..!

✿✿✿✿✿✿✿✿

கடந்த கால காதலியே பூக்களோடு நட்பு பேணாதே.. அவைகள் உன்போன்று வண்டுகளை எமாற்றக்கூடும்..!

✿✿✿✿✿✿✿✿

இந்த சூரிய பயபுள்ளைக்கு என்மீது என்ன காதலோ தெரியவில்லை இப்படி சுட்டுத்தள்ளுது...!

✿✿✿✿✿✿✿✿

நாய்கள் கூவும் நடுநிசி நேரம் நானும் நிலவும் காதல் வெளிச்சத்தில்...!

✿✿✿✿✿✿✿✿

காற்றலை கிச்சுகிச்சு மூட்ட கைபேசி சிணுங்குகிறது கண்ணே உன் விரல்கள் இலக்கங்ககளை முத்தமிட்டதால்...!

✿✿✿✿✿✿✿✿

அனல்மூட்டும் உன் நினைவுகளுக்கு சொல்லிவை இங்கு அடிக்கும் வெயிலில் புனலே பற்றி எரிகின்றது என்று...!

✿✿✿✿✿✿✿✿

நாக்கு நமநமத்து அலைந்து திரியும் சூனாபானா வடிவேலுவாய்... கண்கள் மேய்ந்து திரின்கின்றது கண்ணே உனை காண்பதற்காய்...!

✿✿✿✿✿✿✿✿

வாயினுள் வாழைப்பழமாய் கவிதையினுள் உன்பெயர் இலகுவாய் நுழைந்துவிடுகின்றது...!

✿✿✿✿✿✿✿✿

புழுங்கினால் அரிசி இல்லாவிடின் பொங்கல்... புன்னகைத்தால் அரசி இல்லாவிடின் அரக்கி.. ஆனால் எல்லாம் ரசிக்ககூடியவாறே..!

✿✿✿✿✿✿✿✿

அட போங்கப்பா என்ன பெரிய PIZZA, KFC, McDonald இவையெல்லாம் அன்னையின் ஒருபிடி சோற்றுக்கு ஈடாகுமா...!?

✿✿✿✿✿✿✿✿

ஆற்று வாழையின் அடியில் படுத்துறங்கும் கொறட்டைமீனாய் தூங்கிய என்னை குறட்டை விட்டு எழுப்பி தொல்லை தருகின்றது உன்நினைவுகள்...!

✿✿✿✿✿✿✿✿

கக்குக்கு போகும் வடிவேலுவிடம் கலவரம் பண்ணியதாய்.. கவிதை எழுத போன என்னிடம் மல்லுக்கட்டுகின்றது மங்கை உன் நினைவுகள்...!

✿✿✿✿✿✿✿✿

நீ உங்க அம்மாவ காப்பற்ற வேஷம் போட்டா மட்டும் உன்ன என்ன வெள்ளிகிழமை ஜெயில்லையா போடபோறாங்க #கவுண்டர் ராக்ஸ்

✿✿✿✿✿✿✿✿

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.