நடுநிசி நாயும் நானும்...! (கவிதை)

நிலா முகில் எழில்

தென்னோலை தென்றல் மெல்லிசை

நடுநிசி நாய்க்கூட்ட ஊளை

அத்தனையும் அழகாய் அரங்கேறும்

இரவுநேர இன்பப்பொழுதில்

ஏன் என் உறக்கம் மட்டும்

துன்பப் போர்வைக்குள்

துவண்டுகிடக்கின்றது...?

****

நனவுகளின் வலி அதிகரித்து

கண்கள் கடிகார முட்களோடு

குங்க்பு சண்டையிடுகின்றன...

எங்கு தேடியும் கிடைக்காத

பொருளில் தமிழில்

கைகள் கவிதை எழுத துடிக்கின்றன...

****

விளங்கவும் முடியாமல்

விளக்கவும் முடியாமல்

விரல்கள் விளக்கை

ஏற்றியும் அணைத்தும்

விளையாடி மகிழ்கின்றன...

****

சுவற்றுப் பல்லியும்

சுற்றிமுற்றி பார்த்துவிட்டு

என்னிடம் வால் காட்டுகின்றது...

என்னிலமை இந்நிலைமை

பெண்ணிலமை கண்டு

பேதலித்ததால் வந்ததோ....

ஒரு சொல் சுட்டு

என்வாழ்க்கை வெந்ததோ....!!!

****

என்றும் நட்புடன் நா.நிரோஷ்

Comments

  1. நல்ல கவிதை தொடருங்கள் உறவே.....

    ReplyDelete
  2. நிலவு ஒளியாய்
    குளிர்விக்கிறது கவிதை..

    ReplyDelete
  3. நன்றிகள் சிட்டுக்குருவி, மகேந்திரன் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்....."))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.