அன்பே காதலி அக்கிலிப்பிக்கிலி....!
நாங்கெல்லாம் KFC அக்காக்கிட்டே கேரளா பிட்டு கேடவங்க.. எங்ககிட்டேவா...!!!
**************
ஆதுலர்சாலை - ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை
**************
அன்பே என்கண்கள் அபட்சணம் இருக்கின்றன உன் லட்சணங்கள் காண்பதற்காய்...! #(அபட்சணம் - நோன்பு, பட்டினி)
**************
அடங்காப்பிடாரியாய் அடப்பங்கொடியாய் உன்னினைவுகள் என்னைச்சுற்றி....!
**************
யாரும் இல்லாத சந்துல கீச்சுக்கள் கீப் மூவிங் கீப் மூவிங்.... மூச்சுக்காற்று நீயானதால்...!!!
**************
அன்பே காதலி ஆனதடி இதயம் அக்கிலிப்பிக்கிலி....! #(அக்கிலிப்பிக்கிலி - குழப்பம்)
**************
முகத்திற்கு அலங்கரிப்பும் அகத்திற்கு அகங்கரிப்பும் என்றும் கூடாது...! (அகங்கரிப்பு - செருக்கு)
**************
காக்காய்! காக்காய்! பறந்து வா; கண்ணுக்கு மை கொண்டுவா. காதல்! காதல்! பறந்து வா; கண்ணுக்கு நீர் கொண்டு வா.
**************
சுண்டிவிடப்படுகின்ற ஒற்றை நாணயம் அறிந்திருக்குமோ போட்டிகள் ஓராயிரம் றுபாய்களுக்கு முடிவுசெய்யப்பட்டிருக்கலாம் என்பதை.#IPL #TOSS
**************
தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களாகச் சூளாமணி, யசோதர காவியம், நீலகேசி, உதயண குமார காவியம், நாக குமார காவியம் என்ற ஐந்தினை எண்ணிச் சொல்வர்.
**************
போகிற போக்கைப்பார்த்தால்.. "பந்தல் ஒன்னு போட்டால் போதுமா பொடியன் கிடியன் வேணாமா" என பாடும் நிலைமை வரும்போல... #கலிகாலம்.
**************
நீ உண்டுவிட்டு வீசிய தேநீர்கோப்பை கேட்டு வண்டினங்கள் உண்ணாவிரதம் என் வீட்டு அலுமாரி முன்னால்...!
**************
வாய்ப்பிழந்த நடிகையின் பில்டப் பேட்டியாய் நீபோன பின்பும் உன்னைப்பற்றியே பெருமை பேசுகிறது நெஞ்சம்...!
**************
தென்னோலைகள் கரம் நீட்டி கவிதை கடன் கேட்கிறது நிலா.. பாவம் அதுஅறியவில்லை என்னிடம் இருப்பது உனக்காய் எழுதிய மொக்கைகளின் குவியல் என்று..!
**************
மூன் மூக்கும் முழியுமாய் அழகாய் தெரிகிறது அன்பே அது நீயென பார்க்கும்போது...!!! #அவ்வவ்
**************
டுவிட்டர் சந்துல சிந்துபாடும் மேன்மக்களே அனைவருக்கும் ராத்திரி வணக்கம்.....ஆணிகள் இன்னும் பிடுங்குவதால் கொஞ்சம் சுணக்கம்...!!!
**************
பண்பாட்டை கட்டிக்காக்கும் கருத்தம்மாக்களால் புண்பட்டு புகைவிடுவோர் சங்கத்திற்கு புதியவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்...!
**************
கொளுத்தும் கோடை வெயில் வெளுத்துவாங்கும் நேரம் வேண்டுமென்றே கொழுந்துவிட்டு எரிகிறது உன் ஜாடை நினைவுகள்...!
**************
செத்து செத்து பூப்பூக்கும் என் கவிதைகளுக்கு சீக்கிரமே ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடு அது உன் முத்தமாககூட இருக்கலாம் பரவாயில்லை...!
**************
என்னை எனக்கே பிடிக்கவில்லை : பேச்சுலர் உள்ளாடை.
**************
உன் அகோர பார்வையால் அழகாய் இருந்த இதயத்திற்கு அரோகரா....!!!
**************
கொட்டும் வெயிலில் கூலாய் கோலா தந்து செல்லுதே கொக்கமக்கா உன் விழிரெண்டும்....!
**************
இப்போதெல்லாம் கனவில் சினேகா பிரசன்னாவுடனே பிரசன்னமாகின்றார்..#டீசன்ட்கனவு
**************
இங்கு AC மக்கர் பண்ணும்போதுதான் ஊரில் தென்னோலை தென்றலின் அருமை புரிகின்றது....!
**************
மூடிய விழிகளுக்குள் முடிவுறா திரைப்படம் அன்பே உன்னுடன்.....!
**************
லௌகீக வாழ்க்கையில் லயத்துகிடக்கும் பக்கீகள் நாங்கள் ஆன்மிகத்தை ஆதரிக்க நாட்கள் ஆகுமோ..!
**************
உள்ளே ஒன்றுமில்லை காலியாய் கிடக்கிறது இதயம் #காதல் கொள்ளை
**************
நல்லா தான் இருக்கு எல்லாமே !
ReplyDeleteநன்றிகள் தனபாலன்...:))
ReplyDelete