அன்பே காதலி அக்கிலிப்பிக்கிலி....!


நாங்கெல்லாம் KFC அக்காக்கிட்டே கேரளா பிட்டு கேடவங்க.. எங்ககிட்டேவா...!!!

**************

ஆதுலர்சாலை - ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை

**************

அன்பே என்கண்கள் அபட்சணம் இருக்கின்றன உன் லட்சணங்கள் காண்பதற்காய்...! #(அபட்சணம் - நோன்பு, பட்டினி)

**************

அடங்காப்பிடாரியாய் அடப்பங்கொடியாய் உன்னினைவுகள் என்னைச்சுற்றி....!

**************

யாரும் இல்லாத சந்துல கீச்சுக்கள் கீப் மூவிங் கீப் மூவிங்.... மூச்சுக்காற்று நீயானதால்...!!!

**************

அன்பே காதலி ஆனதடி இதயம் அக்கிலிப்பிக்கிலி....! #(அக்கிலிப்பிக்கிலி - குழப்பம்)

**************

முகத்திற்கு அலங்கரிப்பும் அகத்திற்கு அகங்கரிப்பும் என்றும் கூடாது...! (அகங்கரிப்பு - செருக்கு)

**************


காக்காய்! காக்காய்! பறந்து வா; கண்ணுக்கு மை கொண்டுவா. காதல்! காதல்! பறந்து வா; கண்ணுக்கு நீர் கொண்டு வா.

**************

சுண்டிவிடப்படுகின்ற ஒற்றை நாணயம் அறிந்திருக்குமோ போட்டிகள் ஓராயிரம் றுபாய்களுக்கு முடிவுசெய்யப்பட்டிருக்கலாம் என்பதை.#IPL #TOSS

**************

தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களாகச் சூளாமணி, யசோதர காவியம், நீலகேசி, உதயண குமார காவியம், நாக குமார காவியம் என்ற ஐந்தினை எண்ணிச் சொல்வர்.

**************

போகிற போக்கைப்பார்த்தால்.. "பந்தல் ஒன்னு போட்டால் போதுமா பொடியன் கிடியன் வேணாமா" என பாடும் நிலைமை வரும்போல... #கலிகாலம்.

**************

நீ உண்டுவிட்டு வீசிய தேநீர்கோப்பை கேட்டு வண்டினங்கள் உண்ணாவிரதம் என் வீட்டு அலுமாரி முன்னால்...!

**************

வாய்ப்பிழந்த நடிகையின் பில்டப் பேட்டியாய் நீபோன பின்பும் உன்னைப்பற்றியே பெருமை பேசுகிறது நெஞ்சம்...!

**************

தென்னோலைகள் கரம் நீட்டி கவிதை கடன் கேட்கிறது நிலா.. பாவம் அதுஅறியவில்லை என்னிடம் இருப்பது உனக்காய் எழுதிய மொக்கைகளின் குவியல் என்று..!

**************

மூன் மூக்கும் முழியுமாய் அழகாய் தெரிகிறது அன்பே அது நீயென பார்க்கும்போது...!!! #அவ்வவ்

**************


டுவிட்டர் சந்துல சிந்துபாடும் மேன்மக்களே அனைவருக்கும் ராத்திரி வணக்கம்.....ஆணிகள் இன்னும் பிடுங்குவதால் கொஞ்சம் சுணக்கம்...!!!

**************

பண்பாட்டை கட்டிக்காக்கும் கருத்தம்மாக்களால் புண்பட்டு புகைவிடுவோர் சங்கத்திற்கு புதியவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்...!

**************

கொளுத்தும் கோடை வெயில் வெளுத்துவாங்கும் நேரம் வேண்டுமென்றே கொழுந்துவிட்டு எரிகிறது உன் ஜாடை நினைவுகள்...!

**************

செத்து செத்து பூப்பூக்கும் என் கவிதைகளுக்கு சீக்கிரமே ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடு அது உன் முத்தமாககூட இருக்கலாம் பரவாயில்லை...!

**************

என்னை எனக்கே பிடிக்கவில்லை : பேச்சுலர் உள்ளாடை.

**************

உன் அகோர பார்வையால் அழகாய் இருந்த இதயத்திற்கு அரோகரா....!!!

**************


கொட்டும் வெயிலில் கூலாய் கோலா தந்து செல்லுதே கொக்கமக்கா உன் விழிரெண்டும்....!

**************

இப்போதெல்லாம் கனவில் சினேகா பிரசன்னாவுடனே பிரசன்னமாகின்றார்..#டீசன்ட்கனவு

**************

இங்கு AC மக்கர் பண்ணும்போதுதான் ஊரில் தென்னோலை தென்றலின் அருமை புரிகின்றது....!

**************

மூடிய விழிகளுக்குள் முடிவுறா திரைப்படம் அன்பே உன்னுடன்.....!

**************

லௌகீக வாழ்க்கையில் லயத்துகிடக்கும் பக்கீகள் நாங்கள் ஆன்மிகத்தை ஆதரிக்க நாட்கள் ஆகுமோ..!

**************

உள்ளே ஒன்றுமில்லை காலியாய் கிடக்கிறது இதயம் #காதல் கொள்ளை

**************

Comments

  1. நல்லா தான் இருக்கு எல்லாமே !

    ReplyDelete
  2. நன்றிகள் தனபாலன்...:))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.