ஐ.பி.எல் போட்டியும் ஆபாச ஆட்டமும்...!


பட்டப்பகலில் மொட்டைமாடியில் வட்டநிலா... காயப்போட்ட உன் துப்பட்டா திருடுவதற்காய்...!

****

வேலை நாட்களில் வருகின்ற தூக்கம் விடுமுறை நாட்களில் எங்கே செல்கிறதோ தெரியல ஒரு ஆணிகூட இல்ல அலுப்பாக உள்ளது...!

****

ஒன்றுமட்டும் நன்றாக புரிகிறது மேற்குஇந்தியாவில் முண்டா பணியன் நல்ல மலிவு போல.. #AusvWI

****

சின்னஞ்சிறு வயதில் ஏதோ கிறுக்கியிருந்தேன்... அதை இப்போது மொழிபெயர்த்தேன் "நான் உருப்படவே மாட்டேன்" என்று இருந்தது... சோ சாட் :((

****

மரத்த வச்சவன் மட்டுமில்ல மதுவ வச்சவனும் தண்ணி ஊத்துவான்...:!

கன்னமேனும் உண்டியலில் கண்ணீர் சேமிக்கிறேன் காதலில் அதிகம் சில்லறை வலிகள் வரும் என்பதனால்...!

****

ஐ.பி.எல் இல் அடித்தாடும் வேகத்தைப்போல அவிழ்தாடும் வேகமும் அதிகமாத்தான் இருந்தது.....!

****

வெண்ணிறாடை மூர்த்தியாய் உதடு ரெண்டும் ம்ம்ப்புறும் இசைக்கின்றது அன்பே உன் அழகுச்சாயம் பார்த்தவுடன்...!

****

மிட்டாய் தொலைத்த சிறுவனாய் அழுகிறது கைபேசி அன்பே உன் அழைப்பின்றி போனதால்...:((

****

நீ அவரவிட அவ்வளவு அழகு... "ஹேய் எண்ணங்க சத்தம்..?" ஒண்ணுமில்லைங்க குளிக்கும்போது ஒரு காகம் எட்டிப்பர்க்குது...

****

நீயே மனதை ஆட்டையபோட்டாய் அதில் ஓட்டையபோட்டாய் பின் காதல் வீட்டையே கட்டினாய் இப்போ இடித்துவிட்டு போகிறாய். நான் என்ன அவ்வளவு இழித்தவாயனா?

உள்ளம் உள்ளாடை போன்று தூய்மையாக இருக்கவேண்டும் இல்லாவிடின் நாறிபோய்விடும்..!

****

ஒருவேளை இந்திரன் சந்திரனும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களோ இப்படி மழைவந்து தடைசெய்கிறது..? #IPL5 #matchfixing

****

உன் கால்கள் வந்து கலைக்குமென்றால் காயும் நெல்லாய் காத்துக்கிடப்பேன்....

****

மலிங்க விழியாள் வீசிய பார்வை மனதை அடியோடு பிடுங்குதே..! கமல்ஹாசன் மொழியாள் பேசிய வார்த்தை புரியாமல் விழி பிதுங்குதே..!


மான் கண்ட சிங்கம் பயம் கொள்வதில்லை மன் மோகன் சிங் வாய்திறப்பதில்லை..!

****

தொலையச்சொல்லி தொல்லை தருகின்ற இதயத்திற்கு ஓர் எச்சரிக்கை திரும்பிவர நினைத்தால் பிச்சுப்புடுவேன் பிச்சு..!

****

மனக்கூடை வழியாக நிரம்பி வழிந்த காதல் கடைசியில் மதுக்கடையில் மல்லுக்கட்டுகிறது...:)

****

அன்பே நீ என்னிடம் கடைப்பிடிக்கும் மௌனத்தை ஆசிரியரிடம் கடைப்பிடித்தேன் அடிக்கவருகின்றார் அப்போ நான் அவ்வளவு பொறுமை வாதியா..?

****

நட்புடன் நா.நிரோஷ்.

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.