உன் வைஷ்ணவ கனவுகள்..!
இன்னும் எத்தனை நாள் உறங்கவேண்டும் இப்படி சுடும் கருங்கல்லை தலைக்கு வைத்தபடி...!
**********************
உஷ்ண மணலில் உறங்கிவிடலாம் அன்பே உன் வைஷ்ண கனவுகளில் தவிப்பதைவிட...!
**********************
காதலும் நீயே கவிதையும் நீயே... என்று அன்று நீ கூறும்போது அர்த்தம் புரியவில்லை எனக்கு.... இரண்டிலும் பொய் அதிகம் அதனால்தான் சுவைத்ததோ...!
**********************
செல்லாயி முத்தாயி கண்ணம்மா பொன்னம்மா எல்லோருக்கும் ஒரு செய்தி தெரியுமா? நம்ம நிரோஸ் பயபுள்ள மொட்டைமாடில நிலவ வாடகைக்கு வச்சிருக்கானாம்!
பச்சிளம் குழந்தையாய் அறியாமல் பச்சை வயலாய் பரந்து கிடக்கிறது காதல் என்னுள்....!
**********************
நண்பா கலாய்க்க நீ இன்றி காய்ந்துபோய் கிடக்கிறோம் நானும் பியரும்...:(
**********************
என் இனிய பொன் நிலாவே இன்று நேரத்துடன் மொட்டை மாடி வரவும் அடியேனுக்கு மூடு சரியில்லை மூடி திறக்கவேண்டும் ஓடி வாரும்...!
**********************
அலங்காரம் இல்லாவிடின் அனைத்தும் அலங்கோலம் அன்னையை தவிர....!
**********************
"உன் மௌனத் தாலாட்டில் என் காதல் குழந்தை நன்றாகவே தூங்குகின்றது.! பாவம் !குழந்தை அறியவில்லை போலும்.... இனி கண்விழிக்கவே முடியாதென்பதை...!
**********************
சாலையோர கட்டில் இருந்து சரக்கடித்த நண்பர்கள் சேலை ஒன்றை கண்டதும் ராவா ஒரு ரகமா அடிக்கிறாங்க....!
உன்னைப்பற்றிய யோசனை பலமாக இருக்கும்போதே நினைத்தேன் மொக்கையாகத்தன் என் காதல் சொல்வேன் என்று...!
**********************
உண்மையான நட்பு உணர்ந்தருளல் வேண்டும் நீயும் நானும் நலமுடன் வாழ...!
**********************
மொக்கை மனதிலும் மகிழ்ச்சி சக்கைபோட்டு ஓடும்... காதல் ரெக்கை விரித்து பறந்தால்...!
**********************
என் பயனற்ற மரபணுவும் பாவை உன்பாதம் கண்டால்... புரதம் கொண்டதாய் பூரண குனமடைகின்றது...!
**********************
உன் ஒரு முத்த தூண்டிலூக்காய் என் மொத்த ஜீன்களும் துள்ளிகுதிக்கின்றன....!
**********************
ஒன்றும் வேண்டாமென்று ஒதுங்கி இருந்தாலும் உள்ளத்தில் பதுங்கி இருந்து தாக்குகிறது பாழாப்போன காதல் நினைவுகள்...!
**********************
அழகே உனை எப்படி கவிதையால் முத்தமிட்டாலும் தமிழ் அழகுதான்...!
**********************
நல்லிரவு நெடுஞ்சாலையில் நடந்தபடி செல்கின்றேன் உன்னோடு உள்ளுக்குள் பேசியபடி...... நான் நிழல் நிலா...!
**********************
நிர்வாணமாய் நிலா மேகமுட்களின் இடைநடுவே சிக்கிச்சீரழிந்து சின்னாபின்னமாய் தேய்ந்தபடி...! #நநிகீ
**********************
பாவம் சின்னஞ்சிறார்கள் சுவற்றில் ஒன்னுக்கு அடித்து ஓவியம வரைய முற்பட்டு தோற்றுச்செல்கிறார்கள் இருந்தும் ரசித்தபடியே...:)
நான் போகும் வழியெல்லாம் பூக்கள் போர்தொடுக்கின்றன.. என் சுவாச வளியில் உன் வாசம் கலந்திருப்பதனால்...!
**********************
காரணத்தை பொறுத்துதான் காத்திருப்பின் ரணம் வேறுபடுகின்றது...!
**********************
சிக்கன் கொத்துரொட்டியாய் சிதறிக்கிடக்கிறது நெஞ்சம் உன் கண்கள் வெட்டி...!
**********************
ஆட்டுக்குடி துரத்தி செல்லும் அன்புக்குடியே மீட்டர் வட்டியாய் உன்மீதான காதல் வாட்டிவதைக்குதே.....!!!
**********************
உன் புன்னகையில் பூப்பூக்கும் முன்பல் இரண்டாலும் முன்பின் தெரியாமல் தள்ளாடிப்போனேனே தாவணிப் பெண்ணாலே...:))
**********************
கறையான் சுவைத்த புத்தகமொன்றின் கடைசி பக்கத்தில் உந்தன் பெயர் மட்டும் பத்திரமாக....:))
**********************
செல்வச்செழிப்பின் மணம் நட்பில் அமைந்த மனம்..:))
**********************
ஏனோ திடீரென்று விக்ரமன் படப்பாட்டு கேட்க தோணுது... யாருக்காவது ஏதாவது தியாகம் செய்யபோகிறேனோ..?
**********************
//அலங்காரம் இல்லாவிடின் அனைத்தும் அலங்கோலம் அன்னையை தவிர....!
ReplyDelete//
100% சரி ..
நன்றி நண்பா...:))
ReplyDeleteநல்ல பகிர்வு !
ReplyDeleteநன்றிகள் நண்பா..>!
ReplyDeleteமூச்சு முட்டுது பாஸ் ...ஒரே நேரம் இத்தனையா?கொஞ்சம் கொஞ்சமா போடுங்க நண்பா.எனக்கு பிடித்த நடை இது போல் சிறியதாக நறுக் கவிதைகள்.நேரம் இருந்தால் நம்ம பக்கமும் வாங்க நண்பா...இணைந்திருப்போம்.
ReplyDeleteநிச்சயமாக நண்பா... என்றும் இணைந்திருக்கிறேன்.. நன்றிகள் வந்தமைக்கு..:))
ReplyDelete