உன் ஹன்ட்பெக்கினுள் பூக்கள் உறங்குகின்றன...!


அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வணக்கங்கள்.... ஆறு மாதங்களாக வலைப்பக்கம் வரவில்லை, வேலைப்பளுவும் அதனோடு தொடர்புடைய மாற்றங்களுமே காரணம். ஆனால் தாங்கள் எல்லோருடைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது வாசித்திருந்தேன். நான் தற்பொழுதுதான் டுவிட்டர் கணக்கு ஆரம்பித்திருக்கிறேன். ஆதலால் அதில் இட்ட சில ட்விட்டர் கீச்சுக்கள் மூலம் மீண்டும் தொடர எண்ணியுள்ளேன் எனவே வழமைபோல உங்கள் ஆதரவுகளை தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


பேய்கண்ட நாயாய் ஓடித்திரிந்தேன்,துரத்தி எறிந்தாய் உன் கல்நெஞ்சம் கொண்டு, நோய்கொண்ட சேயாய் வார்த்தையின்றி அழுகிறது நெஞ்சம் காதல் கொண்டு.!

---------------------------------------------------------------------------------------------------------

என்னுள்ளே இதயவீடு இருந்தாலும் வாடகை கொடுத்துதான் நானும் வசிக்கிறேன் # காலக்கொடுமை.

---------------------------------------------------------------------------------------------------------

அவனவனுக்கு அவனவன் பிரச்சனை, இங்கு ஒருத்தர் அவரைக்காய் அவியவில்லை என்று கடைக்காரனை பொரித்துக்கொண்டிருக்கிறார் #புதினம் பார்த்தது.

---------------------------------------------------------------------------------------------------------

காதல் ஒரு மாயமான தூசு கண்கள் அறியாமலே கண்ணீர் வரவழைக்கும்..!!!

---------------------------------------------------------------------------------------------------------

எரியும் வெயில் நின்று எரிபொருள் நிரப்பி உழைத்த காசு ஊருல எரிபொருளுக்கே பத்தல.. வயிறு பற்றி எரிகிறது # வெளிநாட்டு வேலைவாசி. விலைவாசி பற்றி.

---------------------------------------------------------------------------------------------------------

"கண்ணழகு காதழகு மூக்கழகு முழியழகு எல்லாம் அழகுதான் அகத்தில் அன்பழகாய் இருந்தால்"

---------------------------------------------------------------------------------------------------------

இலங்கை பையனின் இன்றைய பிரார்த்தனை :- அன்பே நீ அட்டுபிகரோ லட்டுபிகரோ நானறியேன் ஆனால் துட்டுபிகராய் இருந்துவிடு விலைவாசி தாங்க முடியல :(

---------------------------------------------------------------------------------------------------------

பச்சரிசி பல்லாள் சிரித்தாள் எனைகண்டு, புளுங்கரிசி பொங்கியதாய் காதல் # பாவம் இன்று வாய்கரிசி இல்லாமல் பட்டினியாய் சாதல்.

---------------------------------------------------------------------------------------------------------

நீரில்லா கிணறும் நீறில்லா நெற்றியும் நீயில்லா இதயமும் என்றும் பாழடைந்துதான் கிடக்கின்றது :(

---------------------------------------------------------------------------------------------------------

நட்பும் காதலும் திரித்த கயிறு அதில் நீ தொங்கி வாழ்வில் மேலே எழுவதும் வாழ்வை முடிப்பதும் உன்கையில்தான் # நம்பிக்கை வையுங்க சார்.

---------------------------------------------------------------------------------------------------------

இடைவிடா மழை இளையராஜா இசை இளஞ்சூடாய் தேநீர் இணையத்தில் நீ இன்பமாய் அரட்டையில் # இதைவிட என்னவேனும் சூழ்நிலை சுகம்தரும்.

---------------------------------------------------------------------------------------------------------

இப்போதெல்லாம் அதிகமாய் ஆப்பிளும் ஆரஞ்சும் விற்கப்படுவது வைட்சுக்காகத்தன், பெற்றோர்களே உஷார் # குடிக்கத்தெரியாத கோழை போட்டுக்கொடுக்குது.

---------------------------------------------------------------------------------------------------------

கால்களில் ஒட்டிப்பயணிக்கும் கடைத்தெருக் காகிதங்களாய் காலத்தின் பயணத்தில் நாமும் ஒருவரில் ஒருவர் தங்கியபடி # வாழ்வியல்.

---------------------------------------------------------------------------------------------------------

கோழி கோலம்போட்ட குப்பைகளாய் கலைந்து கிடக்கிறது காளை நெஞ்சம் :( அதில் பூக்கள் எனும் புள்ளிகள் வைத்து சீராக்க முயல்கிறது காதல் கொஞ்சம் :)

---------------------------------------------------------------------------------------------------------

வீடுவந்து சேர்ந்ததும் விரட்டியடிக்கப்பட்ட shopping bagகாய் காற்றில்பறக்க தயாராகிறது கல்லறையில் இருந்து ஒருநெஞ்சம்# போய்பொழப்ப பாருங்கடா

---------------------------------------------------------------------------------------------------------

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வீர வசனம் பேசுகின்றது உன் கண்கள் ரெண்டும். சொல்லிவிடு அவைகளிடம் நான் காதல் பயம்கொள்வேன் என்று.:(

---------------------------------------------------------------------------------------------------------

நாய் கூவும் நேரம் ட்டுவிட்டுகின்றேன் என் மொக்கைகளையும் நீ தாலாட்டாய் ரசிப்பாய் என்று # இரவின் மடியில்.

---------------------------------------------------------------------------------------------------------

முப்பொழுதும் உன் கற்பனைகள் மும்முரமாய் விற்பனை செய்கின்றன உன்னுடைய கவிதைகளை மட்டும்..:)

---------------------------------------------------------------------------------------------------------

மல்லிகை சொல்கிறது உனக்காய் நான் மணப்பதில்லை என்று, மங்கை சொல்கிறாள் உன்னை நான் மணப்பதில்லை என்று # காதல் பொய்கள்.

---------------------------------------------------------------------------------------------------------

ஒருவிடயத்தை ஒருதடவையோடு முடித்துவிடுங்கள் அதை ஏண்டா பொன்னாங்கண்ணி வெளியாக்குதல் போல் திரும்பதிரும்ப நோன்டுறீங்க # உள்ளக்குமுறல்.

---------------------------------------------------------------------------------------------------------

உன்வீட்டு குப்பைகளை எங்கே கொட்டுகிறாய்..? அங்கே எனக்கான காதல்கவிதைகள் கிடக்கக்கூடும். # காதல்காரன்

---------------------------------------------------------------------------------------------------------

என்காதலில் காதலியே துச்சாதனன், இருந்தும் அவளை நினைத்துப்பாடும் கவிதைகள் மட்டும் பாஞ்சாலியின் சேலையாய் நீண்டுகொண்டே போகின்றன #காதல்காரன்

---------------------------------------------------------------------------------------------------------

பையினுள் பைசா இருக்கோ இல்லையோ "மாஸ்டர் நண்பனுக்கொரு டீ" # நட்பு.

---------------------------------------------------------------------------------------------------------

உன் ஹன்ட்பெக்கினுள் பூக்கள் உறங்குகின்றன, அனைத்திலும் உந்தன் வாசம் வீசுவதனால். # காதல்காரன்.

---------------------------------------------------------------------------------------------------------

நமக்கிடையிலான நட்பின் உறவில் காதல் கருத்தடை பண்ணியிருக்கிறேன்.. # காதல்கோளை

---------------------------------------------------------------------------------------------------------

அரசியல் நடத்துறீங்களா அராஜகம் நடத்துறீங்களா அந்தரங்கம் எல்லாம் அரங்கத்தில மல்லுகட்டுது #குடிமகன்

---------------------------------------------------------------------------------------------------------

நீ இல்லா பொழுதுகள் போர் அடிக்கும் நீ வந்த பின்பு போர் தொடுக்கும்...;) #காதல்காரன்.

---------------------------------------------------------------------------------------------------------

உன் கொலுசுகள் சத்தமிட்டு குமுறிய என் காதுகள் கற்பனையிடம் கவிதைபாட சொல்லுகின்றன...!!! #காதல்கரன்

---------------------------------------------------------------------------------------------------------

ஐஸ்கிறீம் வண்டி பின்னால் ஓடுகின்ற அநாதை சிறுவர்களாய் நான்... உன் அழகிய நினைவுகளுக்குப் பின்னால் #காதல்காரன்.

---------------------------------------------------------------------------------------------------------

என்றும் நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

  1. வெல்கம் பேக். டுவிட்டுகள் அருமை.

    ReplyDelete
  2. நன்றிகள் நண்பா...!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.