Posts

Showing posts from May, 2012

பல்லு இருக்கிறவங்க எல்லோரும் பவர்ஸ்டார் ஆக முடியாது..!

Image
பல்லு இல்லாதவங்க எல்லாம் பக்கோடா சாப்பிட முடியாது... பல்லு இருக்கிறவங்க எல்லாம் பவர்ஸ்டார் ஆக முடியாது..! கண்ணீர் துடைக்கும் கைகளுக்கு தங்கஆபரணங்கள் தேவையில்லை , அவை என்றும் மதிக்கப்பட வேண்டியவைதான்...! **** பூங்காற்று திரும்புமா பாடல் கேட்கிறேன் பாலைவனப் புளுதிக்காற்றில் நின்றபடி...! **** மொக்கைகள் முட்டிமோதும் டுவிட்டரில் எட்டியிருந்து புதினம் பார்கிறேன் என்றாவது நானும் வித்தை காட்டலாம் என்றபடி....! **** டுவிட்ஸ் பூக்கள் பூக்கும் டுவிட்டர் தோட்டத்தில் அலுவலக ஆணிகள் ஆடுகளாய் அனைத்தையும் நாசப்படுத்துகின்றன.....:( **** முணுமுணுத்த நாய்க்கு முத்த பிஸ்கட் கொடுத்துவிட்டு ஓட்டின்மீது ஏறி ஒழுகிய மழையாய் உள்நுழைந்தேன் - களவானி **** கண்ணுக்குள் நூறு நிலவு வேண்டாம் ஒரு நிலவுக்கே இழவு போகுதே...:( **** ஏதேனும் நுளம்பு வந்து உன் தூக்கம் கலைக்கிறதா.. அது என் கவிதை படித்துவிட்டு வந்திருக்கிறது போலும்...! **** தூக்கமாத்திரை போட்டும் துயில முடியவில்லை உன் துப்பட்டாவில் சிக்கித்தவிக்கும் என் நினைவுகளால்..! **** நிலவு வந்து கேட்டால் நான் இல்லையென்று சொல்லுங்கள்.... ஒரே

ஐ.பி.எல் போட்டியும் ஆபாச ஆட்டமும்...!

Image
பட்டப்பகலில் மொட்டைமாடியில் வட்டநிலா... காயப்போட்ட உன் துப்பட்டா திருடுவதற்காய்...! **** வேலை நாட்களில் வருகின்ற தூக்கம் விடுமுறை நாட்களில் எங்கே செல்கிறதோ தெரியல ஒரு ஆணிகூட இல்ல அலுப்பாக உள்ளது...! **** ஒன்றுமட்டும் நன்றாக புரிகிறது மேற்குஇந்தியாவில் முண்டா பணியன் நல்ல மலிவு போல.. #AusvWI **** சின்னஞ்சிறு வயதில் ஏதோ கிறுக்கியிருந்தேன்... அதை இப்போது மொழிபெயர்த்தேன் "நான் உருப்படவே மாட்டேன்" என்று இருந்தது... சோ சாட் :(( **** மரத்த வச்சவன் மட்டுமில்ல மதுவ வச்சவனும் தண்ணி ஊத்துவான்...:! கன்னமேனும் உண்டியலில் கண்ணீர் சேமிக்கிறேன் காதலில் அதிகம் சில்லறை வலிகள் வரும் என்பதனால்...! **** ஐ.பி.எல் இல் அடித்தாடும் வேகத்தைப்போல அவிழ்தாடும் வேகமும் அதிகமாத்தான் இருந்தது.....! **** வெண்ணிறாடை மூர்த்தியாய் உதடு ரெண்டும் ம்ம்ப்புறும் இசைக்கின்றது அன்பே உன் அழகுச்சாயம் பார்த்தவுடன்...! **** மிட்டாய் தொலைத்த சிறுவனாய் அழுகிறது கைபேசி அன்பே உன் அழைப்பின்றி போனதால்...:(( **** நீ அவரவிட அவ்வளவு அழகு... "ஹேய் எண்ணங்க சத்தம்.. ?" ஒண்ணுமில்லைங்க குளிக்

நடுநிசி நாயும் நானும்...! (கவிதை)

Image
நிலா முகில் எழில் தென்னோலை தென்றல் மெல்லிசை நடுநிசி நாய்க்கூட்ட ஊளை அத்தனையும் அழகாய் அரங்கேறும் இரவுநேர இன்பப்பொழுதில் ஏன் என் உறக்கம் மட்டும் துன்பப் போர்வைக்குள் துவண்டுகிடக்கின்றது...? **** நனவுகளின் வலி அதிகரித்து கண்கள் கடிகார முட்களோடு குங்க்பு சண்டையிடுகின்றன... எங்கு தேடியும் கிடைக்காத பொருளில் தமிழில் கைகள் கவிதை எழுத துடிக்கின்றன... **** விளங்கவும் முடியாமல் விளக்கவும் முடியாமல் விரல்கள் விளக்கை ஏற்றியும் அணைத்தும் விளையாடி மகிழ்கின்றன... **** சுவற்றுப் பல்லியும் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு என்னிடம் வால் காட்டுகின்றது... என்னிலமை இந்நிலைமை பெண்ணிலமை கண்டு பேதலித்ததால் வந்ததோ.... ஒரு சொல் சுட்டு என்வாழ்க்கை வெந்ததோ....!!! **** என்றும் நட்புடன் நா.நிரோஷ்

மழைதுளியிலும் கண்காணிப்பு கேமரா..!!!

இலங்கையில இனப்பிரச்சனை இந்தியாவில சாதிப்பிரச்சினை இருநாட்டு அரசியல்வாதிகளின் ஆயுளின் நகர்விற்காய்...! ✿✿✿✿✿✿✿✿ காலைநேர கனவுகளில் மட்டுமே பாலைவனங்கள் எங்களுக்கு சோலைவனங்கள்...! அதையும் குலைத்துவிடுகிறது சிலபேரின் குறும்செய்திகள்...! ✿✿✿✿✿✿✿✿ ஒவ்வொரு மழைதுளியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் எப்படி இருக்கும்... ? ஹீ ஹீ # குறுக்குப்புத்தி. ✿✿✿✿✿✿✿✿ ஒருவேளை காதல் சுற்றுப்போட்டிகள் நடந்தால் அனைவரின் தலைக்கும் மாறிமாறி வரலாம் ஆரஞ்சு , பேர்பில் தொப்பிகள்..! ✿✿✿✿✿✿✿✿ ஏசிக்கும் எயாருக்கும் நடக்கும் யுத்தத்தில் குளிர்காய்கிறான் மனிதன்...! ✿✿✿✿✿✿✿✿ கடினபந்தை அடிப்பதற்கு டைமிங் நல்லா இருக்கணும் காலத்தை வெல்வதற்கு டைம் நல்லா இருக்கணும்...! ✿✿✿✿✿✿✿✿ நீ கிள்ளிச்சென்ற மல்லி மணம்வீசுதே உன்பெயார் சொல்லி...! ✿✿✿✿✿✿✿✿ எருமையின் மீதிலே எமன்வரும் நேரம் என்ன நேரம்.. ? யாராச்சும் தெரிந்தவர்கள் உண்டோ அறிந்தவர்கள் உண்டோ.. ? ✿✿✿✿✿✿✿✿ Who to follow இல் பில் கேட்ஸ் இருக்கிறார் ஃபாலோ பண்ண பயமா இருக்கிறது தெருவோர டீக் கடைக்காரனுக்கு தெரிந்தால் அசிங்கமா போய்விடும்..: